இலங்கைக்கான நைஜீரிய கூ டாட்சிக் குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

இலங்கைக்கான நைஜீரிய கூ டாட்சிக் குடியரசின் உயர்ஸ்தானிகரின் நியமனம்

02

மேன்மைதங்கிய (திரு.) அஹமட் சாலிஹூ உமரு அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான நைஜீரிய கூட்டாட்சிக் குடியரசின் உயர்ஸ்தானிகராக (ஓய்வு பெற்ற) மேஜர் ஜெனரல் க்ரிஸ் எஸே அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நைஜீரிய கூட்டாட்சிக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 04 நவம்பர் 2019 அன்று காலை 10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
குடியரசுக் கட்டிடம்
கொழும்பு 01
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close