Vasantha Senanayake

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

2019 மே 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக வசந்த சேனாநாயக்க நியமிக்கப்பட்டார்.
அவர் கடந்த 2010 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்ததுடன், 2014 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியினால் வன ஜீவராசிகள் மற்றும் விளையாட்டுகள் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். இந்த அமைச்சர் பதவியை வகித்த போது, சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில், குறிப்பாக அத்துமீறிய வேட்டை, காடழிப்பு மற்றும் யானைக்குட்டிகளின் சட்ட விரோதமான வர்த்தக செயற்பாடுகளுக்கு எதிராக சுறுசுறுப்புடன் செயற்பட்டுள்ளார்.
வசந்த சேனாநாயக்க 2015 ஆம் ஆண்டில் இலங்கையின் வட மத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவை மாவட்டத்தில் 75,000 இற்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவானதுடன், நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

Close