கொழும்புத் துறைமுக நகரத்தின் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து லண்டனில் விளக்கம்

 கொழும்புத் துறைமுக நகரத்தின் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து லண்டனில் விளக்கம்

லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சி.எச்.இ.சி. போர்ட் சிட்டி கொழும்பு (பிரைவேட்) லிமிடெட் மற்றும் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டு சபை ஆகியவற்றுடன் இணைந்து கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் கல்வி மற்றும் நிதித் துறைகளில் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்த விளக்கக்காட்சியை 2022 ஏப்ரல் 26ஆந் திகதி இங்கிலாந்து முதலீட்டாளர்களுக்கு உயர்ஸ்தானிகராலய வளாகத்தில் ஏற்பாடு செய்தது.

வரவேற்பு உரையை ஆற்றிய ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன, பிரித்தானியக் கல்வி முறையுடன் இணக்கமான கட்டமைப்பையும் கட்டமைப்பையும் கொண்ட இலங்கையின் கல்வித் துறையானது இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு எப்போதும் ஊக்கியாக விளங்குவதாக குறிப்பிட்டார். அவர் பிரித்தானிய நிறுவனங்களை இலங்கையில் வர்த்தக முத்திரைக் கல்வியில் பங்காளியாகுமாறு அழைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டு பேரவையின் பிரதித் தலைவர் சேர் ஹியூகோ ஸ்வைர், பிரித்தானிய நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தினார். பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டு பேரவை இலங்கைக்கு உரிய முதலீட்டு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதற்காக இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்ற விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

சி.எச்.இ.சி. போர்ட் சிட்டியின் உதவி முகாமைத்துவப் பணிப்பாளர் துல்சி அலுவிஹாரே கொழும்பில் இருந்து நிகழ்வில் கலந்துகொண்டதுடன், ஆசியாவிலேயே நவீன வசதிகளைக் கொண்ட ஒரே நீர்முனை திட்டமிடப்பட்ட நகரமான போர்ட் சிட்டி திட்டத்தின் மேலோட்டப் பார்வையை வழங்கினார். துறைமுக நகர நிர்மாணத்தின் முன்னேற்றம் மற்றும் அது வழங்கும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அவர் சாத்தியமான முதலீட்டாளர்களை ஊக்குவித்தார்.

நிகழ்வில் பேசிய, கேட்வே குழுமத்தின் தலைவர் கலாநிதி. ஹர்ஷ, தெற்காசியப் பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பிரித்தானிய அமைப்பு மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்க போர்ட் சிட்டியில் ஒரு சர்வதேச பள்ளியை நிறுவுவதற்கு பிரித்தானியப் பாடசாலையுடன் கூட்டுசேர்வதற்கு தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.

நிகழ்வின் இறுதிப் பிரிவானது ஐடியல் குழுமத்தின் பிரதித் தலைவர் அரவிந்த டி சில்வா, ஒக்சிஜி குழுமத்தின் சிரேஷ்ட கல்வி ஆலோசகர் ஜோன் ஷா, கலாநிதி. ஹர்ஷ அல்லஸ் மற்றும் துல்சி அலுவிஹாரே ஆகியோரின் பங்கேற்புடன் சி.எச்.இ.சி. போர்ட் சிட்டி கொழும்பு இன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிராந்திய பணிப்பாளர் (ஐக்கிய இராச்சியம்) ராதிகா எல்லேபொல அவர்களால் கேள்வி மற்றும் பதில் அமர்வு நடாத்தப்பட்டது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

லண்டன்

2022 மே 05

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close