சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்த அறிக்கை

 சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்த அறிக்கை

சிரிய அரபுக் குடியரசில் ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்துக்களுக்கான சேதங்கள் தொடர்பில் இலங்கை அதிர்ச்சியடைந்துள்ளதுடன், சிரிய அரபுக் குடியரசின் அரசாங்கத்திற்கும், அதன் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.

எமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடன் எப்போதும் இருக்கின்ற அதே வேளை, இந்தக் கடினமான நேரத்தில் சிரிய மக்களின் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டு ஒற்றுமையுடன் இணைந்து நிற்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்கு பிரார்த்திக்கின்றோம்.

பெய்ரூட்டைத் தளமாகக் கொண்ட மற்றும் சிரியாவிற்கு அங்கீகாரம் பெற்ற தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கபில ஜயவீர, சிரியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலங்கையர்கள் இருப்பதாக எந்த அறிக்கையும் இல்லை என்றும் பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 பிப்ரவரி 07

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close