இலங்கை மற்றும் தாய்லாந்துகிடைடையே 06வது சுற்று இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகள் பாங்கொக்கில் நடைபெறவுள்ளன

இலங்கை மற்றும் தாய்லாந்துகிடைடையே 06வது சுற்று இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகள் பாங்கொக்கில் நடைபெறவுள்ளன

இலங்கை மற்றும் தாய்லாந்திற்கிடையே 06வது சுற்று இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகள், 2025 மார்ச் 25 அன்று பாங்காக்கில் உள்ள தாய்லாந்தின், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி அருணி ரணராஜா மற்றும் தாய்லாந்தின் வெளியுறவுக்கான நிரந்தரச் செயலாளர் திருமதி எக்சிரி பின்தருச்சி ஆகியோர் இவ்வாலோசனைகளுக்கு இணை-தலைமை தாங்குவார்கள்.

2023, ஆகஸ்ட் இல் கொழும்பில் நடைபெற்ற 5வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் மற்றும் 2024, பெப்ரவரி இல் முன்னாள் தாய்லாந்து பிரதமரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ வருகைக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த மீளாய்வு ஆனது, எதிர்வரும் பேச்சுவார்த்தைகளில் இடம்பெறவுள்ளது.

இவ்வாண்டு, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவை தமக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், நடைபெறவுள்ள இருதரப்பு ஆலோசனைகளில் அரசியல் ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மீன்வளம் மற்றும் விவசாயத் துறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து  கவனம் செலுத்தப்படும்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

 2025 மார்ச் 23

Please follow and like us:

Close