ஜப்பானியத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

ஜப்பானியத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 28ஆந் திகதி அமைச்சில் வைத்து சந்தித்தார்.

அமைச்சர் சப்ரி மற்றும் தூதுவர் மிசுகோஷி ஆகியோர் இந்த ஆண்டு 70வது ஆண்டு நிறைவை எட்டிய பன்முக  இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.

ஜப்பானிய அரசாங்கம் சரியான நேரத்தில் வழங்கிய உதவி மற்றும் ஆதரவைப் பாராட்டிய அமைச்சர், தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சவால்களைத் தணிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள்  குறித்து தூதுவருக்கு விளக்கினார்.

இந்த சந்திப்பின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஜப்பான் தூதரக  அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 ஆகஸ்ட் 02

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close