இலங்கைக்கான அயர்லாந்தின் தூதுவரின் நியமனம்

இலங்கைக்கான அயர்லாந்தின் தூதுவரின் நியமனம்

12

 

மேன்மைதங்கிய (திரு.) பிரயன் மெக்எல்டஃப் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான அயர்லாந்தின் தூதுவராக திரு. பிரன்டன் வோட் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் அயர்லாந்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 03 அக்டோபர் 2019 அன்று சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

03 அக்டோபர் 2019

15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close