இலங்கைக்கான ஸ்லோவாக்கியத் தூதுவர் தகுதிச் சான்றுகளை சமர்ப்பிப்பு

இலங்கைக்கான ஸ்லோவாக்கியத் தூதுவர் தகுதிச் சான்றுகளை சமர்ப்பிப்பு

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான ஸ்லோவாக்கின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக மாண்புமிகு ரொபர்ட் மக்சியான் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஸ்லோவாக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2023  பிப்ரவரி 02ஆந் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 பிப்ரவரி 02

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close