முடக்கநிலை காலப்பகுதியில் வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு  வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்கல்

முடக்கநிலை காலப்பகுதியில் வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு  வரையறுக்கப்பட்ட சேவைகளை வழங்கல்

இன்று (2021 ஆகஸ்ட் 20) காலை 10 மணி முதல் 2021 ஆகஸ்ட் 30ஆந் திகதி அதிகாலை 4.00 மணி வரை நாடு தழுவிய  முடக்கநிலையின் காரணமாக, இந்தக் காலகட்டத்தில் அவசரமான / உண்மையான தேவைகளையுடையவர்களுக்கு தனது சேவைகளை வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு கட்டுப்படுத்துகின்றது.

அதன்படி, கொழும்பில் உள்ள செலிங்கோ கட்டிடத்தில் அமைந்துள்ள கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு முடக்கநிலை காலப்பகுதியில் மூடப்பட்டிருப்பதுடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் இறப்பு மற்றும் ஏற்றுமதி  ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய சான்றிதழ்கள் தொடர்பான கொன்சியூலர் சேவைகளை மட்டும் கட்டாயமான முன் நியமன அடிப்படையில் வழங்கும்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் இறப்பு விடயங்கள் தொடர்பான சேவைகளை பிராந்திய  கொன்சியூலர் அலுவலகங்கள் வழங்கும்.

முன்நியமனங்களைப் பதிவு செய்வதற்கு தயவுசெய்து கொன்சியூலர் அலுவல்கள் பிரிவை பின்வரும் வகையில்  தொடர்பு கொள்ளவும்: 011 2335942, 011 2338812 அல்லது மின்னஞ்சல் consular@mfa.gov.lk.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஆகஸ்ட் 20

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close