மாலைதீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியுமான கௌரவ முஹம்மத் அப்துல்லா நஷீத் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை கண்டிக்கின்றது.

மாலைதீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியுமான கௌரவ முஹம்மத் அப்துல்லா நஷீத் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை கண்டிக்கின்றது.

மாலைதீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியுமான கௌரவ முஹம்மத் அப்துல்லா நஷீத் மீது 2021 மே 06ஆந் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை கண்டிக்கின்றது.

மிகவும் முக்கியமான இந்த நேரத்தில், இலங்கை மக்களும் அரசாங்கமும் அனைத்து வகையான வன்முறைகளையும் வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், மாலைதீவு மக்களுக்கும் அரசாங்கத்துக்குமான தனது ஒற்றுமையை ஒன்றிணைந்து வெளிப்படுத்துகின்றன.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 மே 07

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close