தூதுவர் மஜிந்த ஜயசிங்க தனது நற்சான்றுகளை ஸ்லோவாக்கியாவில் கையளிப்பு

தூதுவர் மஜிந்த ஜயசிங்க தனது நற்சான்றுகளை ஸ்லோவாக்கியாவில் கையளிப்பு

 ஸ்லோவேனியாவிற்கான இலங்கையின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்ட  தூதுவர் மஜிந்த ஜயசிங்க தனது நற்சான்றுகளை ஸ்லோவாக் குடியரசின் ஜனாதிபதி சுசானா கபுடோவா அவர்களிடம்  பிரட்டிஸ்லோவாவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து 2019 ஜூலை 07ஆந் திகதி கையளித்தார்.

ஸ்லோவேனியன் ஆயுதப்படைகளின் மரியாதை அணிவகுப்புடன் ஆரம்பமாகிய இந்த வைபவத்தைத் தொடர்ந்து  நற்சான்றுகள் கைளிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி சுசானா கபுடோவாவுடனான மரியாதை நிமித்தமான சந்திப்பும் இடம்பெற்றது. ஸ்லோவாக்கிய ஜனாதிபதியுடன் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருநதனர். பங்களாதேஷ், நைஜீரியா, பாகிஸ்தான், பராகுவே, தென்னாபிரிக்கா மற்றும் உருகுவே ஆகிய ஆறு நாடுகளின் தூதுவர்களும் அதே தினத்தில் ஸ்லோவாக்கியா ஜனாதிபதியிடம் நற்சான்றுகளைக் கையளித்தனர். தூதரகத்தின் ஆலோசகரும் சான்சரி தலைவருமான சரித்த வீரசிங்க மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கான இலங்கையின் கௌரவ தூதுவரான பீட்டர் கபாலெக் ஆகியோர் இதன்போது தூதுவருடன் இணைந்திருந்தனர்.

ஸ்லோவாக் ஜனாதிபதி மற்றும் ஸ்லோவாக்கியா மக்களுக்கான இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கை மக்களின் வாழ்த்துக்களை தூதுவர் மஜிந்த ஜயசிங்க வெளிப்படுத்தினார்.

நற்சான்றுகளைக் கையளித்ததன் பின்னரான பக்க நிகழ்வாக, தலைமை உபசரணை / பணிப்பாளர், இராஜதந்திர  உபசரணை ரோமன் ஹலோபன், அரசியல் பணியக பணிப்பாளர் நாயகம் ரோமன் புசெக் மற்றும் வெளிநாடு மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் திணைக்களப் பணிப்பாளர் திரு. ஆண்ட்ரேஜ் கவாலெக் ஆகியோருடன் சந்திப்புக்கள் நடைபெற்றன.

இலங்கை மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு இடையில் வளர்க்கப்பட்ட சிறப்புறவுகளின் முற்போக்கான விரிவாக்கம்  மற்றும் பலப்படுத்துதல் ஆகியவற்றை தூதுவர் நினைவு கூர்ந்தார். இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் மேலும் வளப்படுத்துவதற்குமான பரந்த திறனை வெளிப்படுத்தும் பொருட்டு, பரஸ்பரம் நன்மை பயக்கும் விதத்தில் கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பின் உயர் நிலைகளுக்கு உறவுகளை முன்னேற்றும் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடுகள் மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை நம்புவதாக மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

புதிய இயல்பில் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புக்களை ஆராயும்  முகமாக, ஸ்லோவாக் விவசாள மற்றும் உணவு மன்ற மேற்பார்வை சபையின் தலைவர் பீட்டர் பெங்குரிக், மற்றும் பல்மா நிறுவன பணிப்பாளர் குழுவின் தலைவர் மார்ட்டின் வர்கா ஆகியோருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

1998இல் இலங்கை வெளிநாட்டு சேவையில் இணைந்த தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஒஸ்ட்ரியாவில் நியமனம் பெறுவதற்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தூதுவராகப் பணியாற்றினார். தனது இராஜதந்திர தொழில் வாழ்க்கையில், மக்கள் சீனக் குடியரசின் ஷாங்காயில் துணைத் தூதுவராகவும், மலேசியாவில் பிரதி உயர் ஸ்தானிகராகவும்  பணியாற்றியுள்ளார்.

தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஐக்கிய இராச்சியத்தின் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராவதுடன்,  இலங்கையில் உள்ள புனித ஜோசப் கல்லூரி மற்றும் ரோயல் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.

இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை

வியன்னா

2021 ஜூலை 22

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close