ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் துணை நிரந்தர பிரதிநிதி, தயானி மெண்டிஸ், அவர்கள் மனித உரிமைகள் பேரவையின் 42வது அமர்வில் வழங்கிய அறிக்கை - 11 செப்டம்பர் 2019

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் துணை நிரந்தர பிரதிநிதி, தயானி மெண்டிஸ், அவர்கள் மனித உரிமைகள் பேரவையின் 42வது அமர்வில் வழங்கிய அறிக்கை – 11 செப்டம்பர் 2019

தலைவர் அவர்களே,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயற்குழு, 2015 இல் இலங்கைக்கு வருகை தந்த பின், அதனால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் செயன்முறைப்படுத்தப்பட்டமை பற்றியதிலான தொடர் நடவடிக்கை அறிக்கை பற்றி நாம் குறிப்பிட விழைகிறோம்.

தலைவர் அவர்களே,

நவம்பர் 2015 இல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய செயற்குழுவை இலங்கை வரவேற்றது. இது, ஐ.நாவின் சகல மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் வெளிப்படையானதும் ஆக்கபூர்வமானதுமான ஈடுபாட்டை மேற்கொள்ளவேண்டுமென்ற அரசாங்கத்தின் கொள்கையின் அங்கமாகும். இந்த அணுகுமுறையானது, செயற்குழுவின் வருகைக்கு ஒரு மாதத்திற்குப் பின்னர், டிசம்பர் 2015 இல் இலங்கை சகல சிறப்புச் செயன்முறை ஆணை வைத்திருப்பவர்களுக்கு ஒரு திறந்த அழைப்பினை வழங்கியபோது மேலும் தெளிவாக்கப்பட்டது. இக்கொள்கையைப் பின்பற்றி, 2015 இலிருந்து இலங்கை, 10 ஐ.நா சிறப்புச் செயன்முறை ஆணை வைத்திருப்பவர்களை வரவேற்றோம் என்பதையும் இந்த வருடம் அக்டோபரில் மேலும் ஒரு வருகை உள்ளது எனக் குறிப்பிடுவதிலும் மகிழ்ச்சியடைகிறோம்.

இச்சிறப்பு ஆணை வைத்திருப்பவர்களினால் பரிந்துரைக்கப்பட்ட பல செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதானது; எமது தேசிய முந்துரிமைகளில் நாட்டம் செலுத்தப்படுதல் போல, கடந்த சில வருடங்களாக இணக்கப்பாடு, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை ஊக்கப்படுத்தலுக்கான இலங்கையின் செயற்போக்கிலும் முன்னணியிலுள்ளது. செயற்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டவற்றின் நிலைப்பாட்டிலிருந்து இதைக் குறிப்பிடலாம்.

ஏற்கனவே அரசாங்கம் எழுத்து பூர்வமாக வழங்கிய புதுப்பிப்புகளை மீண்டும் கூற முயற்சிக்காமல், குறுகிய 4 ஆண்டு காலப்பகுதிக்குள் இலங்கையினால் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தின் முக்கிய அம்சங்களைச் சுருக்கமாக எடுத்துரைக்கிறேன்:

• டிசம்பர் 2015 இல், செயற்குழு விஜயம் செய்ததிலிருந்து 1 மாதத்திற்கும் குறைவான காலப்பகுதிக்குள், அனைத்து நபர்களையும் கட்டாயமாக காணாமல் போவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டது. மே 2016 இல் சாசனம் ஒப்புதலளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சட்டத்துடன் சாசனத்தின் விதிகளை இணைப்பது மட்டுமல்லாமல், சாசனத்தின் கீழ் வழங்கப்பட்ட சில பாதுகாப்புக்களையும் மேம்படுத்துகின்ற வலுவான தேசிய சட்டமொன்று, இலங்கைப் பாராளுமன்றத்தால் மார்ச் 2018 இல் இயற்றப்பட்டது. எதிர்காலத்தில் வலிந்து காணாமலாக்கப்படுவதற்கான எந்தவொரு செயலும் மீள நிகழாமலிருப்பதையும், பொறுப்புக்கூறலையும் உத்தரவாதப்படுத்துவதற்கான மூலகமாக இந்த சட்டக் கட்டமைப்பு செயற்படுகின்றது.

• ஜூன் 2018 இல், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள வசதியைப் போன்ற, அனைத்து தடுப்புக்காவல் சார்ந்த இடங்களையும் தடையின்றி அணுகுவதற்கு வழிவகுக்கும் வகையிலான உடன்படிக்கையொன்றில் இலங்கை அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்தது.

• காணாமல் போனவர்கள் குறித்த ஒரு சுயாதீன அலுவலகம் 2016 இல் நிறுவப்பட்டு, 2018 இல் முழுமையாக செயற்படுத்தப்பட்டது. இன்றைய நிலவரப்படி, இந்த அலுவலகம் கொழும்பில் உள்ள தனது அலுவலகத்திற்கும் மேலதிகமாக 3 பிராந்திய அலுவலகங்களை நிறுவியுள்ளதுடன், அவற்றுள் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகம் மிகவும் சமீபத்தில் ஆகஸ்ட் 2019 இல் நிறுவப்பட்டது. தனது ஆணையின் படி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, செயற்குழுவிலிருந்து பெறப்பட்ட நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளும் இந்த சுயாதீன பொறிமுறையுடன் பகிரப்பட்டுள்ளன.

• மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தனிநபர் மற்றும் கூட்டு இழப்பீடுகளை வழங்குவதற்காக, இழப்பீட்டுக்கான அலுவலகம் 2018 அக்டோபரில் நிறுவப்பட்டு இந்த ஆண்டு செயற்படுத்தப்பட்டது.

• காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் காணாமல் போனவர்களின் பெயரில் சில வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவும் முகமாக, இறப்புச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, தற்போது உடனில்லாத சான்றிதழ்களை வழங்குவதற்கான செயற்பாடு சட்டத் திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

• காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் அதன் இடைக்கால அறிக்கையில் மேற்கொண்ட பரிந்துரைக்கிணங்க, தற்போது உடனில்லாத சான்றிதழைக் கொண்டுள்ள காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு, ரூபா. 6000 மாதாந்த கொடுப்பனவை 2019 அக்டோபர் முதல் வழங்குவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியது.

• காணாமல் போன மற்றும் காணாமலாக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களை ஆதரிப்பதற்காக 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் ரூபா. 500 மில்லியன் ஒதுக்கப்படவுள்ளது.

தலைவர் அவர்களே,

அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனைகள், புதிய சட்டங்களை உருவாக்குதல் மற்றும் புதிய கொள்கைகளை உருவாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய அளவிடப்பட்ட, ஆனால் நிலையான தேசிய செயன்முறைகளின் விளைவுகளே இந்த சாதனைகள் என நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். எமது தேசிய அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைவதற்கான தீர்மானம் ஆகியன தடைகள் இருந்தபோதிலும் மிகவும் வலுவானதாக உள்ளன. அரச அதிகாரத்தையும், நாட்டின் சட்டங்களையும் பயன்படுத்துவதற்கான தடைகள் மற்றும் சமநிலைகளைக் கொண்டுள்ள பல சுயாதீன நிறுவனங்களை உருவாக்கியுள்ள 19 வது திருத்தத்தை உள்ளடக்கிய இலங்கையின் அரசியலமைப்பு, அரசின் பல்வேறு ஆயுதங்களின் நடவடிக்கைகள் மற்றும் தீர்மானங்களை அறிவித்து ஆதரிக்கின்றன. உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய முடிவுகளால் சட்டத்தின் ஆட்சி மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாம் எமது பாதையில் சென்றுகொண்டிருக்கின்றோம் ஆதலால், இலங்கை தனது உடனடியான முன்னுரிமை விடயங்களை மாற்றியமைக்கும் வகையில் கட்டாயப்படுத்திய பல நூற்றுக்கணக்கான அப்பாவி இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டினரின் உயிர்களைக் காவுகொண்ட இந்த வருடத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்கள் உட்பட, பல சவால்களுக்கு மத்தியில் இலங்கை ஈட்டும் இத்தகைய முயற்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தினை வழங்குமாறு இந்த சபையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

எவ்வாறாயினும், ஈஸ்டர் ஞாயிறு தினத்துக்கு பிந்தைய சூழலில் நாம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்த போதிலும், எமது அனைத்து பிரஜைகளினதும் மனித உரிமைகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பை செயற்படுத்த உதவும் கொள்கைகளுக்கான இலங்கையின் ஈடுபாட்டினை அடிக்கோடிட்டுக் காட்டுவது மிகவும் முக்கியமானதாகும்.

தலைவர் அவர்களே,

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இலங்கை எந்த அளவில் முக்கியத்துவமளிக்கின்றது என்பதனை மேற்கூறிய விடயங்கள் குறித்து நிற்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக எழுந்த பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இந்த விடயத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றமானது, அனைவருக்கும் மனித உரிமைகளை உறுதி செய்வதற்காக இலங்கை பேணி வந்த, மற்றும் தொடர்ந்தும் பேணி வருகின்ற வலுவான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது.

நன்றி.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close