ஓமானில் உள்ள இலங்கை சமூகம் கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு  நன்கொடை

 ஓமானில் உள்ள இலங்கை சமூகம் கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு  நன்கொடை

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவின் படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஓமான் சுல்தானேற்றில் உள்ள இலங்கை சமூகம் வழங்கியுள்ளயது. மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் இந்த நன்கொடைக்கு இலங்கை நில அளவையாளர்கள் சகோதரத்துவ அமைப்பு, வங்கியாளர்கள்  மற்றும் ஓமானில் உள்ள ஏனைய தொழில் வல்லுநர்கள் பங்களித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற விழாவில் ஓமானில் உள்ள இலங்கை சமூகத்தின் நன்கொடை வழங்கப்பட்டது. உற்பத்தி, வழங்கல் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்  சன்ன ஜயசுமன மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி. ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க ஆகியோரிடம் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே கையளித்தார்.

ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத் மற்றும் தூதரக ஊழியர்கள் நன்கொடைக்கு பங்களித்ததுடன் அதனை ஒருங்கிணைத்து இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 அக்டோபர் 07

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close