மத சுதந்திரம் அல்லது  நம்பிக்கை  குறித்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்

மத சுதந்திரம் அல்லது  நம்பிக்கை  குறித்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்

pic1

2019 ஆகஸ்ட் 15 முதல் 26 வரை இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்துள்ள மத அல்லது நம்பிக்கை சுதந்திரம் குறித்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் அகமத் ஷாஹீட்அமைச்சர் திலக் மாரப்பன அவர்களை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இன்று சந்தித்தார்.

 

2015 ஆம் ஆண்டில் இலங்கையால் ஐ.நா.வின் சிறப்பு நடைமுறைகள் பணிப்பாணையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட நிலையான அழைப்பிற்கு பதிலளிக்கும் விதமாக சிறப்பு அறிக்கையாளர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் சிறப்பு நடைமுறைகள் கட்டளை வைத்திருப்பவர் ஒருவர் நாட்டிற்கு மேற்கொண்ட 10 வது விஜயம் இதுவாகும். இந்த விஜயத்தை இலங்கை அரசும் சிறப்பு அறிக்கையாளரும் 2018 இல் திட்டமிட ஒப்புக்கொண்டிருந்தனர்.

 

ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் திறந்தவெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்பசிறப்பு நடைமுறைகள் பணிப்பாணையாளர்கள் பலரின் வருகைகளுக்கு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மாரப்பன இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது தெரிவித்தார். சிறப்பு அறிக்கையாளர்களுடன் ஈடுபடுவதை அரசாங்கம் எப்போதும் பாராட்டுவதாகவும்அவர்களின் கருத்துக்களை சாதகமாக கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறப்பு அறிக்கையாளரரின் விஜயத்தின் போது இலங்கை அரசு தனது முழுமையான ஒத்துழைப்பை அவருக்கு வழங்கும் என சிறப்பு அறிக்கையாளருக்கு அவர் உறுதியளித்தார்.

 

சிறப்பு அறிக்கையாளர் இந்த அழைப்பிற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அதே வேளைகுறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு சம்பவங்களுக்குப் பின்னர் நாடு எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் உணர்ச்சி ரீதியான விடயங்கள் ஆகியவற்றை ஒப்புக் கொண்டார். 21 ஏப்ரல் 2019 சம்பவங்களைத் தொடர்ந்து, இடம்பெயர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளின் காவல் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க அரசாங்கம் எடுத்துள்ள முறையை அவர் குறிப்பாகப் பாராட்டினார்.

 

வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க தலைமையில் இடம்பெற்ற சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் கூட்டத்திலும் சிறப்பு அறிக்கையாளர் கலந்து கொண்டார். பாதுகாப்பு அமைச்சுஇலங்கை பொலிஸ்சட்டமா அதிபர் திணைக்களம்புத்த சாசன மற்றும் வயம்ப அபிவிருத்தி அமைச்சுசுற்றுலா மேம்பாட்டு அமைச்சுவனவிலங்கு மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சுதபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் அமைச்சுபெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் அமைச்சுவீடமைப்புகட்டுமானங்கள் மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சுதேசிய கல்வி ஆணைக்குழுநல்லிணக்க வழிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம்தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியன உள்ளடங்கலான பல அரச நிறுவனங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டன.

 

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இலங்கையின் முன்னேற்றங்களை மதிப்பிடுவதில்நிலைமையை இயல்பாக்குவதற்கும்அனைத்து மக்களின் காவலையும்பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும் அரசாங்கம் காட்டிய திறனைக் கவனிக்க வேண்டும் என்று அரசாங்க பங்குதாரர்கள் சந்திப்பின் போது வெளிவிவகார செயலாளர் ஆர்யசிங்க குறிப்பிட்டார். மிதவாதப்படுத்தல்தீவிரவாதம் மற்றும் மத சுதந்திரத்தை பாதுகாப்பதில் எழும் பிரச்சினைகளை நிர்வகிப்பதில் மற்ற நாடுகள் பயன்படுத்தும் சிறந்த நடைமுறைகள் குறித்து சிறப்பு அறிக்கையாளரின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள அரசு ஆர்வமாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

சிறப்பு அறிக்கையாளர் தனது வருகையின் போது வடக்குகிழக்குவடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல பகுதிகளுக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதத் தலைவர்கள்சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோரையும் அவர் மேலும் சந்திப்பார்.

 

விஜயத்தின் முடிவில்அரசாங்க பங்குதாரர்களுக்கான ஒரு விளக்கவுரை 26 ஆகஸ்ட் 2019 அன்று நடைபெறுவதுடன்அதனைத் தொடர்ந்து சிறப்பு அறிக்கையாளரின் ஆரம்ப கண்டறிதல்களை ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகபத்திரிகையாளர் சந்திப்பொன்று அதே நாளில் இடம்பெறும். சிறப்பு அறிக்கையாளர் நாட்டிற்கான விஜயம் குறித்த தனது அறிக்கையை 2020 மார்ச் மாதம் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
 
2019 ஆகஸ்ட் 15

 

 

pic 2
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close