இலங்கைக்கான பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகரின் நியமனம்

இலங்கைக்கான பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகரின் நியமனம்

Photo 01

மேன்மைதங்கிய ஜேம்ஸ் டோரிஸ் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகராக திருமதி சாரா அன்னே பாஸ்கல் ஹல்டன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 19 ஆகஸ்ட் 2019 அன்று சமர்ப்பித்தார்.

 

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
19 ஆகஸ்ட் 2019
Group Photo
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close