2024 ஜூலை 23 அன்று கனேடிய பிரதமரின் அறிக்கையில் தெரிவித்திருந்த குறிப்புகளை இலங்கை நிராகரிக்கிறது

2024 ஜூலை 23 அன்று கனேடிய பிரதமரின் அறிக்கையில் தெரிவித்திருந்த குறிப்புகளை இலங்கை நிராகரிக்கிறது

கனேடியப் பிரதமரால் 2024 ஜூலை 23 அன்று, வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டை நிராகரிப்பதை இலங்கை மீண்டும் வலியுறுத்துகிறது.  இவ்விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது.

கனடாவின் உள்ளூர் வாக்கு வங்கி அரசியல் பின்னணியிலிருந்து எழும் இந்த குற்றச்சாட்டு இலங்கை மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் ஒற்றுமை மற்றும் இன நல்லிணக்கத்திற்கு உகந்தது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 ஜூலை 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close