லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு

லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு

லெபனானில் பாதுகாப்பு நிலைமை நிலையற்ற, தொடர்ச்சியான அவசர நிலையில் உள்ளது.

பீரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகமானது, இலங்கை அமைப்புக்கள் மற்றும் தூதரகத்தில் பதிவுசெய்யப்பட்ட தனிப்பட்ட இலங்கையர்களுடன் தொடர்ந்து தொடர்பைப் பேணி வருகிறது. தூதுவர் கபில ஜயவீர மற்றும் இலங்கை தூதரக அதிகாரிகள், அங்குள்ள இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இவ்வவசர நிலைக்கு முகங்கொடுத்து, தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட தங்குமிடங்களைப் பெற்றுள்ள, சில இலங்கையர்களைத் தவிர, இதுவரை எந்த இலங்கையர்களும் இந்நிலைமையால் பாதிக்கப்படவில்லை.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 2024 அக்டோபர் 03

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close