
புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகம அவர்கள் 2018 ஒக்டோபர் 30ஆந் திகதி செவ்வாய்க்கிழமையன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமைச்சிற்கு வருகை தருகையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் மற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தர்களினால் அமைச்சர் வரவேற்கப்பட்டார்.
கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அமுணுகம அவர்கள் அமைச்சின் சிரேஷ்ட உத்தியோகத்தர் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
30 ஒக்டோபர் 2018


Please follow and like us:


