உயர் ஸ்தானிகர் மொரகொட இந்தியாவின் வேதிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கட்காரியிடமிருந்து விடை பெற்றமை

உயர் ஸ்தானிகர் மொரகொட இந்தியாவின் வேதிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கட்காரியிடமிருந்து விடை பெற்றமை

இந்தியாவிற்கான, இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, 24 ஆகஸ்ட் அன்று புதுடில்லியில் இந்தியாவின் வீதிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஸ்ரீ நிதின் கட்காரியிடமிருந்து விடை பெற்றார்.

தொடக்கத்தில் உயர் ஸ்தானிகர் மொரகொட, இந்தியாவின் வீதிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கு புதுடில்லியில் தனது பதவிக்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கியது தொடர்பில், நன்றிகளை தெரிவித்தார்.

அவர் அமைச்சரை வீதியிணைப்பு, அதாவது இந்திய-இலங்கை இணைப்புப்பாத்திரத்தில் அடங்கிய  , "Promoting Connectivity, Catalyzing Prosperity: India- Sri Lanka economic partnership Vision” என்ற தொனிப்பொருளில் ஜூலை, இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமருக்கிடையே இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது இடம்பெற்றது. உயர் ஸ்தானிகரும், பிரதமரும் இணைந்த தொலைநோக்கு பாத்திரத்தில் குறிப்பிடப்பட்ட, இணைப்பு குறிக்கோள் நிர்ணயத்திற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி கலந்துரையாடினர்.

மேலும் கலந்துரையாடலில், போக்குவரத்துத் துறையின், புதைபடிவ எரிபொருட்கள், குறிப்பாக மின்சாரம் மற்றும் உயிர் எரிபொருட்கள் போன்ற மாற்றுவழிகளை மேம்படுத்துவதில், வழங்கும் ஒத்துழைப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு இருந்தது. இம்மாற்று வழிகளானவை இலங்கை போன்ற நாடுகளுக்கு மிகப்பொருத்தமான, கிரய வினைத்திறன் மிக்கதும், சுற்றுச் சூழலுக்கு இணக்கமானதுமாக இருந்தன. அமைச்சர் இந்தியாவின் எரிபொருள் மாற்று வழிகளுக்கான பிரத்தியேக அனுபவத்தையும், அதன்மூலம் பெற்ற இந்தியாவின் சிறப்புத்தர்ச்சியை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ள தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.

உயர் ஸ்தானிகர் மொரகொட, இலகுவான நேரமொன்றில் இலங்கைக்கு வருகை தருமாறு விடுத்த அழைப்பினை அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

உயர் ஸ்தானிகர் மொரகொட, இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளவாறு, சீதை சிறைப்படுத்தப்பட்டிருந்த, இலங்கையின் சீதா எலியவிலுள்ள சீதை அம்மன் கோவிலின் (அசோக வதிகா), இரு புறமும் ஓடும் ஓடையிலிருந்து பெறப்பட்ட கல்லொன்றினை ஆளுநருக்கு பரிசாக வழங்கினார்.

மஹாராஷ்ட்ர மாநில ஆசீர்வாதமான, ஸ்ரீ நிதின் கட்காரி, வீதிப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் 2014 இலிருந்து தற்போதுவரையான மிகநீண்ட காலமாக 8 வருடம் பதவியிலுள்ளார். அவர் 2009 இலிருந்து 2013 வரையான காலம் பாரதீய ஜனதா கட்சியின் (BJP) தலைவராகவும் சேவையாற்றினார். அவர் நுண்ணளவான, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், கப்பல்துறை, நீர்வளம், கங்கை அபிவிருத்தி மற்றும் புத்தாக்கம், கிராமிய அபிவிருத்தி & பஞ்சாயத்து ராஜ் ( ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை) ஆகிய அமைச்சுக்களின் பதவி வகித்தார். அவர் மேலும் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

இலங்கை உயர் ஸ்தானிகர் நிலையம்

புதுடில்லி

2023 ஆகஸ்ட் 24

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close