நாட்டிற்கு மீளத் திரும்புவதற்கான திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களிடம் வெளிவிவகார செயலாளர் கோரிக்கை விடுத்தார்

நாட்டிற்கு மீளத் திரும்புவதற்கான திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களிடம் வெளிவிவகார செயலாளர் கோரிக்கை விடுத்தார்

கட்டாயமான சூழ்நிலைகளை முகங்கொடுப்போருக்காக அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் மட்டுப்படுத்தப்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு மீள நாடு திரும்புவதற்கான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்னர், இந்த நேரத்தில் அவ்வாறு நாடு திரும்புவது தமது தொழில்கள் மற்றும் கல்வியில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை கவனமாக அளவீடு செய்யுமாறு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நேற்று (மே 16, 2020) இலங்கை ரூபவாஹினியில் இடம்பெற்ற 'நியூஸ் அட் 9' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்த அதே வேளை, 38,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாட்டிற்கு மீளத் திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், அவர்களுள் கிட்டத்தட்ட 28,000 பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாவர் எனத் தெரிவித்தார். வெளிவிவகார செயலாளர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:

இரண்டு வாரங்களுக்கு முன்னர் எனது அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தைத் தொடர்ந்துபுலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் தற்போது முன்னுரிமை வழங்குகின்ற போதிலும்இன்னும் பலர் மீண்டும் நாடு திரும்ப விரும்புகின்றனர்அவர்கள் முறையான அந்தஸ்த்தின்றி தங்கியிருப்பவர்களாவதுடன்சட்டவிரோதமானவர்கள் என்பதால்அந்த நாடுகளில் சுகாதார வசதிகள் மற்றும் வேறு எதனையும் அவர்களால் அணுகிக் கொள்ள முடியாதுதொழில்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பலர் உள்ளனர்அவர்கள் மிகவும் ஆதரவற்றவர்கள்ஆனால் தொழில்களில் உள்ளவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பைத் தவிர்க்கும் பொருட்டு விடுமுறை நாட்களுக்காக வர விரும்புவோரை நாம் பின்னர் கருத்தில் கொள்ளலாம்.

 

தொழில்வாய்ப்பினை இழத்தல் அல்லது கல்வி வாய்ப்பினை இழத்தல் அல்லது மீள நாட்டிற்கு திரும்பி வருவதால் ஏற்படக்கூடிய பெரிய தாமதங்கள் குறித்து கவனமாக அளவிடுமாறுசில காலத்திற்கு முன்பு நாங்கள் மாணவர்களிடம் கோரியதைப் போலவே இந்த ஊழியர்களிடமும் நாங்கள் கோரிக்கை முன்வைக்கின்றோம்ஏனெனில்மாணவர்களின் விடயத்தில்சில பெற்றோர் தமது பிள்ளைகள் திரும்பி நாட்டிற்கு வர வேண்டும் என விரும்புகின்றனர்மற்றும் சில பெற்றோர் தமது பிள்ளைகள் தங்கியிருந்து அவர்களது பரீட்சைகளை நிறைவு செய்ய வேண்டுமென விரும்புகின்றனர்எனவேஇவை தனிப்பட்ட விருப்புத் தெரிவுகள் என எனக்குத் தெரியும்இதை மேற்கொள்வதில் பகுத்தறிவுக் கண்ணோட்டம் இருக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன்ஏனெனில்வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் கண்ணோட்டத்தில்இன்று அவர்களை நாட்டிற்கு மீள அழைத்து வருவதில் நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கின்றோம்ஆனால்அவர்களது கல்வி அரையாண்டினை இழக்க நேரிடுகையில்ஒரு மாதம்இரண்டு மாதங்களின் பின்னர் மாணவர்களாகிய அவர்களின் நிலையை மீண்டும் சரிசெய்ய முயற்சிக்குமாறு மீண்டும் எம்மிடம் கோரிக்கை விடுக்கப்படும் என எனக்குத் தெரியும்தொழில்வாய்ப்பை இழப்பவர்களுக்கும் இதே நிலைதான்.

 

எனவேவெளிநாட்டு உறவுகள் அமைச்சும்அரசாங்கமும் மக்களை திரும்ப அழைத்து வர முயற்சிக்கும் அதே அளவுக்குதிரும்பி வர விரும்பும் இந்த மக்கள்குறுகிய காலத்திற்கு வர விரும்புவதைத் தவிர்த்துஅவர்களது அத்தியாவசியத் தேவைகளை மிகவும் கவனமாக மதிப்பீடு செய்தல் வேண்டும்இந்த வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதற்கு இது சிறந்த நேரமாக இருக்காது என்பதுடன்அவர்கள் இங்கு வரும்போது 21 நாட்களுக்கான தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டும்.

 

நாடு திரும்பாது பின்வாங்குவோருக்கு முடிந்தவரை உதவிகள் மேற்கொள்ளப்படுவதனை உறுதிசெய்வதற்கு நாங்கள் முடிந்தவரை முயற்சிப்போம்குறிப்பாக அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர்கள் இருக்கும் இடத்திலேயே நிர்வகிக்கும் பொருட்டுஎமது 67 தூதரகங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 16 வலையமைப்புக்கள் மூலமாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உலர் உணவுகளை வழங்குவதற்கும்மற்றும் தேவையானபோது மருந்துப் பொருட்களை வழங்குவதற்கும் முயற்சிக்கின்றோம்.

 

குறுகிய கால விஜயங்களில் இருப்பவர்களைப் பொறுத்தவரைநாங்கள் அவர்களை மீண்டும் அழைத்து வர வேண்டும்அவர்கள் எங்கும் செல்ல முடியாதுநாங்கள் அதை அறிந்திருக்கின்றோம்ஓரளவிற்கு நிலவும் சிரமம் என்னவென்றால்அவர்கள் எல்லா இடங்களிலும் பரவியுள்ளனர் என்பதுடன்தற்போது சேவையிலுள்ள ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் சரக்கு விமானங்கள் கூட இந்தத் தலைநகரங்களில் பலவற்றிற்கு செல்வதில்லைஎனவேஏற்கனவே வரும் விமானங்களில் விஜயம் செய்வதற்கு அவர்களை நாங்கள் ஒருங்கிணைக்கும்போதுஅவர்கள் அனைவரையும் எவ்வாறு நாம் மீள அழைத்து வரப் போகின்றோம் என்பது ஒரு முக்கிய விடயமாக அமைவதுடன்அது குறித்து தற்போது மிகவும் உயர்ந்த மட்டங்களில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

 

 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு

கொழும்பு

17 மே 2020

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close