தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 பிரச்சினைகளைத் தொடர்ந்து, இலங்கையர்களின் நலனை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உறுதி செய்கின்றது

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள கோவிட்-19 பிரச்சினைகளைத் தொடர்ந்து, இலங்கையர்களின் நலனை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உறுதி செய்கின்றது

அண்மையில், குறிப்பாக டேகு நகரில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய் நிலைமைகளைத் தொடர்ந்து, தென் கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளை சியோலில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சு உன்னிப்பாக கண்காணித்தும், ஒருங்கிணைத்தும் வருகின்றது.

சியோலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கூற்றுக்கு அமைய, தற்போது எந்த இலங்கையர்களும் வைரஸால் பாதிக்கப்படவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 20,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்த நாட்டில் வசிக்கின்றனர். 915 பேர் வசிக்கும் டேகுவில் உள்ள இலங்கையர்கள் மீது தூதரகம் குறிப்பாக கவனம் செலுத்தி வருகின்றது.

தூதரகத்தால் இயக்கப்படும் தொலைபேசி இலக்கங்கள் தற்போது ஒரு சுழற்சி அடிப்படையில் செயற்படுவதுடன், மேலும் இலங்கை சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிப்பதற்காக ஒரு உதவியமைப்பும் செயற்பட்டு வருகின்றது. இரண்டு சமூக ஊடகக் குழுக்கள் நிறுவப்பட்டுள்ள அதே வேளை, இலங்கைத் தூதரகம் கோயில்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருடனும் தொடர்பில் இருந்து வருகின்றது.

தொலைபேசி இலக்கங்கள்:

தூதரகத்தின் பொதுவான தொலைபேசி இலக்கங்கள்:

(0082)-2-735-2966, (0082)-2-735-2967, (0082)-2-794-2968

செல்வி. சசங்கா நிகபிட்டிய, முதலாம் செயலாளர் - (0082)-10-7222-1352

திரு. செனரத் யாப்பா, ஆலோசகர் (வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி) - (0082)-10-3389-2227

செல்வி. நிலந்தி பெலவத்தகே, இரண்டாம் செயலாளர் - (0082)-10-4084-0855

செல்வி. சமந்தா சேநாயக்க, மூன்றாம் செயலாளர் (வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி) - (0082)-10-7499-2966

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
22 பெப்ரவரி 2020
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close