மியன்மாரின் ஆங் சா பு மடாலயத்தின் தலைவரான அக்கமஹா சத்தம்மா ஜோதிகா தாஜா அதி வணக்கத்திற்குரிய ஆங் சா பு சயாதவ் இலங்கைக்கு 17,550 அமெரிக்க டொலர் நன்கொடை

மியன்மாரின் ஆங் சா பு மடாலயத்தின் தலைவரான அக்கமஹா சத்தம்மா ஜோதிகா தாஜா அதி வணக்கத்திற்குரிய ஆங் சா பு சயாதவ் இலங்கைக்கு 17,550 அமெரிக்க டொலர் நன்கொடை

2023 ஜனவரி 26ஆந் திகதி இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மியன்மாரின் ஆங் சா பு மடாலயத்தின் தலைவரான அக்கமஹா சத்தம்மா ஜோதிகா தாஜா அதி வணக்கத்திற்குரிய ஆங் சா பு சயாதவ், 17,550 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூபா. 6,521,580) இலங்கை அரசாங்கத்துக்கு நன்கொடையாக வழங்கினார்.

அதி வணக்கத்திற்குரிய ஆங் சா பு சயாதாவின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு, மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டாரவிடம் மியன்மாரின் ஆங் சா பு மடாலயத்தின் தலைவரான அக்கமஹா சத்தம்மா ஜோதிகா தாஜா அதி வணக்கத்திற்குரிய ஆங் சா பு சயாதவ் அவர்களால் யங்கூன் லொட்டே ஹோட்டலில் வைத்து உத்தியோகபூர்வமாக இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

நன்கொடையை ஏற்றுக்கொண்ட தூதுவர் ஜனக பண்டார, மியன்மாரின் வணக்கத்திற்குரிய ஆங் சா பு சயாதவ் அவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தார்.

இலங்கைத் தூதரகம்,

யாங்கூன்

2023 பிப்ரவரி 02

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close