இலங்கைக்கான அர்ஜென்டினா குடியரசின் தூதுவரின் நியமனம்

இலங்கைக்கான அர்ஜென்டினா குடியரசின் தூதுவரின் நியமனம்

 புது டில்லியை தளமாகக் கொண்ட இலங்கைக்கான அர்ஜென்டினா குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக  திரு. ஹ்யூகோ ஜேவியர் கோபி அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் அர்ஜென்டினா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2021 டிசம்பர் 21 ஆந் திகதி மாலை 5.30 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 டிசம்பர் 22

Please follow and like us:

Close