மேன்மைதங்கிய (திரு.) ஜோஸெப் ட்ரோஃபெனிக் அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான ஸ்லோவேனியா குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக கலாநிதி. மார்ஜன் சென்சென் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஸ்லோவேனியா குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் கொழும்பு 01 இல் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் 2020 ஜனவரி 20ஆந் திகதி காலை 10.30 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
20 ஜனவரி 2020

Please follow and like us:



