புதுடில்லியைத் தளமாகக்கொண்ட இலங்கைக்கான கென்யக் குடியரசின் விசேடமானதும் முழுமையான அங்கீகாரமும் பெற்ற உயர்ஸ்தானிகராக முன்யிரி பீட்டர் மைனா அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன், கென்யக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம், கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதிச் செயலகத்தில், 2024 நவம்பர் 28 ஆம் திகதி மு.ப.10.00 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
குடியரசுக் கட்டிடம்
கொழும்பு 01
2024, நவம்பர் 28
Please follow and like us: