தொண்டு மூலம் நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமையை வளர்த்தல்: பிலிப்பைன்ஸிலிருந்து இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் நன்கொடை

தொண்டு மூலம் நல்லெண்ணம் மற்றும் ஒற்றுமையை வளர்த்தல்: பிலிப்பைன்ஸிலிருந்து இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் நன்கொடை

பிலிப்பைன்ஸ் - இலங்கை வர்த்தக சபையின் தலைவர் மைக்கேல் சென் அவர்களிடமிருந்து ஐந்தாயிரம் (5,000) அலகு பெரிட்டோனியல் டயலிசிஸ் தீர்வுகள் இலங்கைக்கு நன்கொடை வழங்கப்பட்டமையை மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஒருங்கிணைத்தது.

2022 ஜூலை 29 - 31 வரை நடைபெற்ற 2022 சர்வதேச தலைமைத்துவ மாநாட்டிற்கான பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிலிப்பைன்ஸ் - இலங்கை வர்த்தக சபையின் தலைவரிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

நாட்டின் சார்பாக, பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர, இந்த இக்கட்டான தருணத்தில் நாட்டிற்கான நல்லெண்ணத்தின் பாராட்டத்தக்க செயலுக்காக தலைவருக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு, இரக்கம் மற்றும் பிணைப்புக்களின் அடிப்படையில் நிறுவப்பட்ட மக்கள் உறவுகளின் ஆற்றல்மிக்க வெளிப்பாடே இந்த ஈடுபாடாகும் என அவர் விரிவாகக் குறிப்பிட்டார்.

இந்த மருத்துவப் பொருட்கள் பிலிப்பைன்ஸில் உள்ள பாக்ஸ்டர் உற்பத்தி நிலையங்களில் இருந்து தயாரித்து, அனுப்பப்பட்டு இந்த மாதம் இலங்கைக்கு வந்துள்ளது. நாட்டின் பொது சுகாதார அமைப்பில் டயலிசிஸ் நோயாளிகளுக்கு இதுபோன்ற அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை இந்த ஏற்றுமதி நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

இலங்கைத் தூதரகம்,

மணிலா

2022 டிசம்பர் 05

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close