ஷாங்காயில் நடைபெற்ற சர்வதேச ஆபரண உச்சி மாநாட்டில் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன பங்கேற்பு

ஷாங்காயில் நடைபெற்ற சர்வதேச ஆபரண உச்சி மாநாட்டில் தூதுவர் கலாநிதி பாலித கொஹொன பங்கேற்பு

தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, ஷாங்காய் நகரில் நடைபெற்ற சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி 2021 க்கு இணையாக நடைபெற்ற சர்வதேச ஆபரண உச்சி மாநாட்டில் முக்கிய பேச்சாளராகப் பங்கேற்றார். பெல்ஜியம் மற்றும் இத்தாலி நாட்டின் தூதுவர்கள் இந்த மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றினர். ஆசியான், மலேசியா மற்றும் மியன்மார் நாட்டின் பிரதிநிதிகள் அனைவரும் இணையவழியில் ஏனைய பேச்சாளர்களாக இடம்பெற்றிருந்தனர்.

சீனாவின் இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களுக்கான மின்னியல் சந்தை கணிசமாக மீட்சியடைந்துள்ளதுடன், தற்போது இது தொற்றுநோயிலிருந்து மீண்டு வரும் இத்தாலிய மற்றும் பெல்ஜியத் தொழில் துறைகளின் முக்கிய பங்குதாரராக உள்ளது.

இரத்தினங்கள் மற்றும் ஆபரண வர்த்தகம் தமது பொருளாதாரத்திலும் சீனாவுடனான வர்த்தகத்திலும் முக்கிய அங்கமாக மாறியுள்ளது என்பதை பெல்ஜியம் மற்றும் இத்தாலிய மொழி பேசுபவர்கள் வலியுறுத்தினர். அந்த நாடுகளில் இது ஒரு பாரிய வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாகவும் விளங்குகின்றது.

இரத்தின ஏற்றுமதியை ஒரு பாரிய ஏற்றுமதியாகவும், இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் வாய்ப்பாகவும் உருவாக்கும் வகையில் சீனாவின் ஆபரணத் தொழில்துறை இந்த ஆண்டு 14% வளர்ச்சியடையும். உலக தொழில்துறை 3-4% வளர்ச்சி அடையும்.

அதன் பின்னர் மதிய உணவில் கலந்து கொண்ட பலர், குறிப்பாக இலங்கை இரத்தினங்களின் பரந்த வரிசை ஏனைய கண்காட்சியாளர்களால் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதைக் குறிப்பிட்டு, சீனாவின் சர்வதேச இறக்குமதி கண்காட்சி 2022 இல் இலங்கையின் இரத்தினங்கள் மற்றும் ஆபரண வர்த்தகம் சிறப்பாக பிரதிநிதித்துவம் செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தனர். தாய், இந்திய மற்றும் பாகிஸ்தானிய இரத்தினக் காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஈர்க்கக்கூடிய இலங்கைக் கற்களால் கணிசமான அளவில் அனைவரையும் கவர்ந்தன. இலங்கையின் நட்சத்திரக் கூட்டத்திற்காக முதலில் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை ஆக்கிரமித்திருந்த பளிங்கு அணிகலன் தாழ்வாரம் (துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்தது) கவனத்தை ஈர்த்த முக்கிய அம்சம் ஆகும்.

இலங்கையின் இரத்தினக்கல் ம றும் ஆபரணங்கள் அதிகார சபையுடன் முறையான உறவை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து சீனாவின் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண பரிசோதனை நிலையத்தின் பணிப்பாளர் யே ஷிபின் மற்றும் புவியியல் ஆய்வகத் தரப்படுத்தலின் பணிப்பாளர் யாங் லிக்சின் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2021 நவம்பர் 19

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close