ஆப்கானிஸ்தான் புல்-இ-ஆலம் நகரில் இடம்பெற்ற பொதுமக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை வன்மையாகக் கண்டிக்கின்றது

ஆப்கானிஸ்தான் புல்-இ-ஆலம் நகரில் இடம்பெற்ற பொதுமக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை வன்மையாகக் கண்டிக்கின்றது

ஆப்கானிஸ்தானில் உள்ள லோகர் மாகாணத்தின் புல்-இ-ஆலம் நகரில் 2021 ஏப்ரல் 30ஆந் திகதி இடம்பெற்ற பொதுமக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை வன்மையாகக் கண்டிக்கின்றது. பொதுமக்கள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான கண்மூடித்தனமான வன்முறையானது, அமைதியின்மையைக் கொண்டுவர விரும்பும் குற்றவாளிகளின் கொடூரத்தன்மையை நிரூபிப்பதாக அமைகின்றது. நாட்டில் நீடித்த அமைதியைக் கொண்டுவருவதற்கான பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் உறுதியாக இணைந்து நிற்கின்றது.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 மே 01

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close