வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சார்க் நாடுகளின் தூதரக தலைவர்களை சந்தித்தார்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சார்க் நாடுகளின் தூதரக தலைவர்களை சந்தித்தார்

????????????????????????????????????

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுணுகம இன்று (31) அவரது அலுவலகத்தில் சார்க் நாடுகளின் தூதுவர்களையும் உயர்ஸ்தானிகர்களையும் மற்றும் அவர்களது பிரதிநிதிகளையும் சந்தித்தார். பரஸ்பர விருப்புக் கொண்ட விடங்களைக் கலந்தாலேசிப்பதற்காக இந்தத்தருணத்தில்  ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ்,  நேபாளம்,  இந்தியா,  மாலைத்தீவுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தூதரகத் தலைவர்களும் அவர்களது பிரதிநிதிகளும் சமுகமளித்திருந்தனர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கான செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

31 ஒக்டோபர்

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close