மாலைதீவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்

மாலைதீவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்

 

கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளரான திரு. இப்ராஹிம் முஹம்மட் சொலிஹ் அவர்கள் மாலைதீவில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டியமையை இலங்கை வரவேற்பதுடன், இத் தேர்தலில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை மேம்படுத்தும் வகையில் மக்கள் தமது வாக்குரிமையை தீர்மானம் மிக்க முறைமையில் பிரயோகித்துள்ளனர்.

சுயாதீனமானதும், நடுநிலையானதும், சமாதானம் மிக்கதுமான தேர்தல் நடைமுறையை வெற்றிகரமாக நடாத்தியமையை முன்னிட்டு மாலைதீவு அரசாங்கத்திற்கும், அதன் பொதுமக்களுக்கும் நாம் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்காவிடினும் கூட, நாங்கள் திரு. சொலிஹ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், மாலைதீவிற்கும், இலங்கைக்குமிடையிலான உறவுகளை உயர்ந்த அளவிற்கு கொண்டு செல்வதற்காக அவருடனும், மாலைதீவின் மக்களுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு

 

24 செப்டெம்பர் 2018

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close