2021 ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை விஷேட கூட்டம் சமத்துவத்தை மறுபரிசீலனை செய்தல்: நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தசாப்தத்தில் அனைவருக்கும் இனவாதம், வெறுப்புணர்வு மற்றும் பாகுபாடுகளை நீக்குதல்  

2021 ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை விஷேட கூட்டம் சமத்துவத்தை மறுபரிசீலனை செய்தல்: நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தசாப்தத்தில் அனைவருக்கும் இனவாதம், வெறுப்புணர்வு மற்றும் பாகுபாடுகளை நீக்குதல்  

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி மாண்புமிகு மொஹான் பீரிஸ் அவர்களின் அறிக்கை

2021 பெப்ரவரி 18, வியாழக்கிழமை

மெய்நிகர் கூட்டம்

தலைவர் அவர்களே,

இனவாதம், வெறுப்புணர்வு மற்றும் பாகுபாடு ஆகியவை உண்மையில் எமது ஜனநாயக விழுமியங்களை வரலாறு முழுவதும் சோதித்துள்ளதுடன், சமகால பாகுபாடு வடிவங்கள் அமைதி மற்றும் சமூக ஸ்திரத்தன்மைக்கான எமது தேடலில் பெரும் சவால்களை முன்வைக்கின்றன. வெறுக்கத்தக்க பேச்சின் தடையற்ற சலசலப்பு, தேசியவாத ஜனரஞ்சகத்தின் மீள் எழுச்சி மற்றும் இன மேன்மை ஆதிக்கத்தின் சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் அமைப்புக்கள் எம் அனைவருக்குமான தோல்விகள் ஆகும். அணியிலக்கணத்தைத் தாண்டி நாம் எவ்வாறு இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக முன்னேறுகின்றோம்? மறைந்த ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அவர்களின் பின்வரும் கூற்று நினைவுக்கு வருகின்றது, நான் அதனை மேற்கோள் காட்டுகின்றேன்:

'மற்றொரு நபரின் தோலின் நிறம், அல்லது அவரது பின்னணி அல்லது அவரது மதம் காரணமாக யாரும் வெறுக்கப்படுவதில்லை. மக்கள் வெறுப்பதற்குக் கற்றுக்கொள்கின்றார்கள், வெறுப்பதற்குக் கற்றுக் கொள்ள முடிந்தால், அவர்கள் அன்பைக் கற்பிக்க முடியும், ஏனென்றால் அன்பு மனித இதயத்திற்கு நேர்மாறாக இருப்பதை விட இயல்பாகவே வருகின்றது' - மேற்கோள்

தலைவர் அவர்களே, எமது பெரும்பாலான பிரச்சினைகளுக்கு மூல காரணம், சொந்த நலன்களைக் கொண்ட தரப்பினர்களால் வெறுப்பைப் பரப்புவதாகும். ஜனநாயகமற்ற ஆர்வங்கள், நாம் நிற்கும் மனித விழுமியங்களை நிலைநிறுத்தாத ஆர்வங்கள், 'வெறுப்பின்' மனிதத் தூண்டுதலான எளிதான அரசியல் கருவியைப் பயன்படுத்தி தமது தவறான சொந்த சித்தாந்தங்களை வளர்க்கின்றன. இனவாதம், வெறுப்புணர்வு மற்றும் பல்வேறு வகையான பாகுபாடுகளிலிருந்து எழும் வெறுப்பானது, ஒரு சமூக மற்றும் அரசியல் சக்தியாக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக, கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக துயரங்களை உருவாக்கி, பயன்படுத்தப்பட்டு வந்த அதே மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை நிறுத்திய வெறுப்பின் விதைகள் பாதிக்கப்படக்கூடியவர்களின் மனதில் எவ்வாறு நடப்பட்டன என்பதை இலங்கையில் நாங்கள் கண்டிருக்கின்றோம். அதிர்ஷ்டவசமாக, நாடு இப்போது அந்தக் கட்டத்திற்கு அப்பால் நகர்ந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளுக்கு எமது அரசியலமைப்பில் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதால், இலங்கைக் குடும்பத்தில் அவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன.

பல்லின, பல மத மற்றும் பல கலாச்சாரங்களையுடைய நாடாக இருப்பதால், 'வாழவும், வாழ விடவும்' என்ற கருத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். மனித வாழ்க்கையின் மதிப்பை அங்கீகரிக்கும் அதே வேளையில், அன்பு, மன்னிப்பு மற்றும் இரக்கம் போன்ற பௌத்தக் கொள்கைகளால் வழிநடத்தப்படுகின்றது. ஒரு காலத்தில் அரசு சாராத செயற்பாட்டாளர்கள் என்று அழைக்கப்பட்ட நபர்களும் பயனுள்ள பிரஜைகளாக நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்வதனை இயலச் செய்யும் வகையில் புனர்வாழ்வளிக்கப்பட்டனர். இதைச் செய்ய இலங்கைக்கு எப்படி தைரியம் இருந்தது என்று பலர் கேட்டிருக்கின்றார்கள். அரசு சாராத முன்னாள் செயற்பாட்டாளர்களை நீங்கள் எவ்வாறு புணர்வாழ்வளித்து விடுதலை செய்தீர்கள் என எனது வெளிநாட்டு சகாக்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுள்ளனர். இது உண்மையில் ஏனைய நாடுகளில் காண இயலாத மிகவும் அரிதான ஒரு நடைமுறை. இலங்கை சமத்துவத்தை மறுபரிசீலனை செய்து, அந்த மேலதிகமான மைல் தூரத்தை நோக்கி நடந்து, நாம் பெற வேண்டிய நீடித்த அமைதியைக் கொண்டுவர முடியுமா? பாகுபாட்டை ஒழித்து, ஒன்றுபட்ட இலங்கையை அடைவது என்றால் அந்த மேலதிக மைல்களை நாங்கள் தொடருவோம்.

துரதிர்ஷ்டவசமாக, இலங்கையில் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அபிவிருத்திக் கொள்கைகளின் மையத்தில் நிலையான அபிவிருத்தி இலக்குகளுடன் பல தசாப்த கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாடுபடுவதால், பல்வேறு மக்களால் பரப்பப்படும் வெறுப்புடன் தொடர்புடைய தடைகளை நாங்கள் தொடர்ந்தும் எதிர்கொள்கின்றோம். இன்னும் வருத்தமளிக்கும் விடயம் என்னவென்றால், எமது சொந்த உலகளாவிய சமூகம் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் அதிகாரம் மற்றும் பிரிவுகளில் உள்ளவர்கள் உண்மைகளை முழுமையாக சிதைப்பதானது, வெறுப்பின் நெருப்பிற்கு தொடர்ந்தும் எரிபொருளை சேர்ப்பதுடன், அது நிச்சயமாக அதன் வெப்பத்தை இழக்கின்றது. இலங்கை தனது சொந்த மக்களின் சிறந்த நலன்களைக் கவனிப்பதற்கும், முன்னேறுவதில் முன்னேற்றம் காண்பதற்கும் தண்டனை விதிக்கப்படுகின்றது. இதுபோன்ற வெளிநாட்டு நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு மட்டுமே உதவும் என்பதில் சந்தேகமில்லை.

தமது மண்ணிலான தமது இருப்பை தொடர்ந்தும் மறுத்து வரும் பல நாடுகளில் நிலவும் இனவெறி மற்றும் பாகுபாடு தொடர்பான உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது, நாம் ஏன் நிறுத்தப்படுகின்றோம் என்ற கேள்வியையே இது கேட்கின்றது. மனித வாழ்க்கை முக்கியமானது, அவை கருப்பு அல்லது வெள்ளையாக இருக்கலாம். நான் படித்த ஒரு செய்திக் கட்டுரையை மேற்கோள் காட்ட விரும்புகின்றேன், 'இனவெறி மென்மையானது', 'சமத்துவமின்மை மிதமானது' மற்றும் இதுபோன்ற 'பிரச்சினைகள் மோசமானவை அல்ல, எனவே வாழ்க்கை சிறந்தது'?

அன்பிற்குரிய நண்பர்களே,

மேலாதிக்க நடத்தை என்பது வாழ்க்கையின் ஒரு உண்மையாகவே இருக்கும் என தோன்றுகின்ற அதே சமயம், சமத்துவத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் இனவாதம், வெறுப்புணர்வு மற்றும் பாகுபாடு ஆகியவற்றை அகற்றுவதற்கும் எமது உன்னதமான பாதையை நாம் பின்பற்ற வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளை நாம் உண்மையிலேயே நிவர்த்தி செய்து, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமானால், கையாளும் அரசியலுடன் தொடர்புடைய சிறிய இனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, சர்வதேச சமூகம் யதார்த்தமாக எதை அடைய முடியும் என்பதைப் பார்க்க வேண்டும்.

மறைந்த ஜனாதிபதி மண்டேலாவின் கூற்றை மீண்டும் மேற்கோள் காட்டி நிறைவு செய்கின்றேன்:

'எமது உலகம் இனம், நிறம், பாலினம் அல்லது மதம் ஆகியவற்றால் பிரிக்கப்படவில்லை. எம் உலகம் விவேகமுடையவர்களாகவும், விவேகமற்றவர்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. விவேகமற்றவர்கள் தம்மை இனம், நிறம், பாலினம் அல்லது மதம் ஆகியவற்றால் பிரிக்கின்றார்கள்' - மேற்கோள்

எனவே, தலைவர் அவர்களே, தமது சொந்த ஆட்சிகளில், அவர்களின் மனித உரிமைத் திட்டங்களில், இனவாதம், வெறுப்புணர்வு மற்றும் எந்தவொரு பாகுபாட்டையும் இழிவுபடுத்துவது இன்றியமையாதது என்ற சித்தாந்தத்தை பிரயோகிப்பதற்கு நான் சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கின்றேன்.

நன்றி.

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close