2வது கொள்கை உரையாடலை மெய்நிகர் ரீதியாக இலங்கை மற்றும் ஜப்பான் நிறைவு செய்தன

2வது கொள்கை உரையாடலை மெய்நிகர் ரீதியாக இலங்கை மற்றும் ஜப்பான் நிறைவு செய்தன

 இலங்கை - ஜப்பான் கொள்கை உரையாடலின் இரண்டாவது சுற்று 2021 பெப்ரவரி 10ஆந் திகதி மெய்நிகர் ரீதியாக இரண்டு வெளிநாட்டு அமைச்சுக்களினதும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மட்டத்தில் நடைபெற்றது.

இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான பதிவுசெய்யப்பட்ட அரசியல் மற்றும் கலாச்சாரத் தொடர்புகளின் உறுதியான அடித்தளத்தை நினைவூட்டி, இரு தரப்பினரும் தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களிலான கொள்கை முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடியதுடன், பரஸ்பர ஆர்வத்தின் பொதுவான குறிக்கோள்களைப் பின்பற்றுவதில் ஒன்றிணைந்து செயற்படுவதற்குத் தீர்மானித்தனர்.

வர்த்தகம், முதலீடு மற்றும் அபிவிருத்திக் கூட்டாண்மை ஆகியவற்றை வலுப்படுத்துவதில் விஷேட கவனம் செலுத்துவதன் மூலம் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முக்கிய பகுதிகளை இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்து குறிப்பிட்டதுடன், பொருத்தமான சமகாலத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டனர். இந்து சமுத்திரத்தில் விதிகளின் அடிப்படையிலான கடல் ஒழுங்கின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில், இரு தரப்பினரும் கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆதரவை மேம்படுத்துவதிலான கூட்டு முயற்சிகளைத் தொடருவதற்குத் தீர்மானித்தனர்.

வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கியதுடன், ஜப்பானியத் தரப்பானது ஜப்பான் வெளிவிவகார சிரேஷ்ட பிரதி அமைச்சர் மொரி டேகோ அவர்களால் தலைமை தாங்கப்பட்டது.

டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர, இரு வெளிநாட்டு அமைச்சுக்கள், கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகம் மற்றும் இலங்கை வர்த்தகத் திணைக்களம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலின் போது இணைந்திருந்தனர்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 பெப்ரவரி 10

 

 

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close