வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்டுடன்  சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்டுடன்  சந்திப்பு

2023 பெப்ரவரி 01ஆந் திகதி அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்டுடன் இடம்பெற்ற மதிய உணவுச் சந்திப்பில்,  இலங்கை - அமெரிக்க இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துரையாடினார்.

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பைடனிடமிருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வெளியிடப்பட்ட  விசேட செய்தியை உப செயலாளர் நுலாண்ட் வழங்கியதுடன், இது இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன் 75வது ஆண்டை குறித்து நிற்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவைப் பாராட்டிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்  சப்ரி, குறிப்பாக நாட்டின் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா வழங்கிய குறிப்பிடத்தக்க உதவிகளை வரவேற்றார். ஆட்சியை மேம்படுத்தவும், ஊழலை ஒழிக்கவும், நல்லிணக்கத்தை வளர்க்கவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவரித்தார்.

நாட்டிற்கு இது ஒரு முக்கியமான ஆண்டாகும் எனக் குறிப்பிட்ட அதேவேளை, தற்போதைய சவால்களை சமாளித்து, சமூகப் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கான அமெரிக்காவின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் துணைச் செயலாளர் நுலாண்ட்  தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அரச பணியகத்திலான இந்தியாவுக்கான துணைச் செயலாளர் நான்சி இஸ்ஸோ ஜக்சன், துணைச் செயலாளர் மேரி ஃப்ராங்காகிஸ் மற்றும் அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரி கெவின் பிரைஸின் விஷேட உதவியாளர்  ஆகியோருடன் கலந்துகொண்டார் துணைச் செயலாளர் நுலாண்ட். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரியுடன், இலங்கை தரப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேற்குப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஷோபினி குணசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கான தனது குறுகிய விஜயத்தின் போது, துணைச் செயலாளர் நுலாண்ட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் மரியாதை நிமித்தம்  சந்தித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 பிப்ரவரி 07

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close