வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு அதன் வழக்கமான சேவைகளை மீண்டும் தொடங்குகின்றது

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு அதன் வழக்கமான சேவைகளை மீண்டும் தொடங்குகின்றது

கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு 2022 ஜூலை 04ஆந் திகதி தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வார நாட்களிலும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.

யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களும் இதே வேலை ஏற்பாடுகளைப் பின்பற்றும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு 01

2022 ஜூலை 01

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close