வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

கம்யூனிஸ்ட் கட்சியின் காலம் XIII இன் உறுப்பினரும், வியட்நாமின் மாகாணக் கட்சிக்  குழுவின் செயலாளருமான புய் வான் ங்கியெம் அவர்களின் தலைமையிலான 35 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட வியட்நாமிய தூதுக் குழுவினர், பதில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தாரக்க பாலசூரியவை 2023 நவம்பர் 17 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, அரசியல், வர்த்தகம், முதலீடு, கலாச்சாரம், கல்வி மற்றும் சுற்றுலா  ஆகிய துறைகளில் பரஸ்பரம் ஆர்வமுள்ள பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைத்து மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு இந்த சந்திப்பின் போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின் போது, பிராந்திய பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தில்  இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கைக்கு விஜயம் செய்த வியட்நாமியத் தூதுக்குழுவினர் இலங்கையில் தங்கியிருந்த  போது பிரதமர் தினேஷ் குணவர்தனவையும் சந்தித்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு 01

2023 நவம்பர் 17

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close