மறைந்த மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு  வரப்படவுள்ளது

 மறைந்த மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டு  வரப்படவுள்ளது

2022 ஜனவரி 17ஆந் திகதி திடீர் சுகயீனம் காரணமாக காலமான மிலானுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் விஷாரத நீலா விக்கிரமசிங்கவின் சடலம் 2022 ஜனவரி 27ஆந் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

அவரது சடலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களால் பெற்றுக்கொள்ளப்படும்.

மிலானில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்துடன் கலந்தாலோசித்து, திருப்பி அனுப்பும் செயன்முறையை வெளிநாட்டு அமைச்சு ஒருங்கிணைத்து வருகின்றது.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2022 ஜனவரி 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close