பிராங்பேர்ட் ஆம் மெயினில் நடைபெற்ற இராஜதந்திர கோடைகாலக் கொண்டாட்டங்களில் இலங்கையின் சுற்றுலாவை துணைத் தூதுவர் ஊக்குவிப்பு

பிராங்பேர்ட் ஆம் மெயினில் நடைபெற்ற இராஜதந்திர கோடைகாலக் கொண்டாட்டங்களில் இலங்கையின் சுற்றுலாவை துணைத் தூதுவர் ஊக்குவிப்பு

2021 ஆகஸ்ட் 26ஆந் திகதி நடைபெற்ற வருடாந்த இராஜதந்திர சபை கோடைகாலக் கொண்டாட்டங்களில் இலங்கையின் துணைத் தூதுவர் திருமதி. மதுரிகா ஜோசப் வெனிங்கர் தலைமை விருந்தினராக உரையாற்றினார். இந்த நிகழ்வு பிராங்பேர்ட் ஆம் மெயினில் உள்ள பிரத்யேக வில்லா பொன்னில் இராஜதந்திர சபை நிறுவனர் செயலாளர் நாயகம் திருமதி. ஹங் நுகியென் மற்றும் நிறைவேற்றுத் தலைவர் திரு. அண்ட்ரியஸ் டிரிப்ட்கே ஆகியோரால் நடைபெற்றது.

கோடைகாலக் கொண்டாட்டத்தை ஜேர்மனியின் தென் பிராந்தியத்தைச் சேர்ந்த தொழில்துறைத் தலைவர்கள், இராஜதந்திர சபை உறுப்பினர்கள் மற்றும் ஹெசியன் கௌரவ துணைத் தூதுவர்கள் மற்றும் பிராந்திய வர்த்தகத் தலைவர்களால் அலங்கரிக்கப்பட்டது.

பெரிய மற்றும் புகழ்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய துணைத் தூதுவர், இலங்கையின் அழகையும் அதன் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தையும் எடுத்துரைத்தார். ஆசியாவின் பல்வேறு உயிரியல் மையங்களில், பல அசாதாரண வனவிலங்குகளையுடைய 26 தேசிய பூங்காக்கள் உள்ள இலங்கையும் ஒன்றாகும் என அவர் சுட்டிக் காட்டினார். இலங்கை பல இன, பல கலாச்சார மற்றும் பல மத விருந்தோம்பல் மக்கள் கொண்ட நாடு என்பதால் பல கலாச்சார விழாக்களை கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேரடித் தொடர்பு மற்றும் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் கொழும்பிலிருந்து பிராங்பேர்ட் ஆம் மெயின் வரை வாரத்திற்கு இரண்டு முறை இயங்குவதாக துணைத் தூதுவர் குறிப்பிட்டார். உயிரியல் குமிழின் பாதுகாப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாத் தளங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

கொண்டே நாஸ்ட், லோன்லி பிளேனட், டிரவல் அண்ட் லெஷர், ஐக்கிய அமெரிக்காவின் டுடேவின் குளிர்கால பயணத்திற்கான சிறந்த நாடு, ஆசியாவின் முன்னணி சாகச சுற்றுலா போன்ற பல வெளியீடுகளால் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் வருகை தர சிறந்த தீவாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக துணைத் தூதுவர் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

துணைத் தூதுவர் இலங்கை நன்மை அடைந்த கோவெக்ஸ் வசதிக்கு ஜேர்மன் அரசாங்கத்தின் உலகளாவிய பங்களிப்புக்கு இலங்கையின் பாராட்டுக்களைத் தெரிவித்தார். இந்த சைகை இலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் பிரதிபலிப்பாகும்.

இலங்கை துணைத் தூதரகத்தின் இணைப்பாளர் திருமதி. அஷினி பெரேரா மற்றும் உள்ளூர் பணியாளர்கள் இந்தக் கொண்டாட்டங்களில் இலங்கைத் தேயிலையை ஊக்குவித்தனர். இலங்கைத் தேயிலையின் 7 பிராந்திய சுவைகளை மாதிரியாகப் பருகி விருந்தினர்கள் மாலையில் மகிழ்ந்தனர். விருந்தினர்களுக்கு இலங்கையின் பாரம்பரிய இனிப்புகள் வழங்கப்பட்டன. இலங்கை சுற்றுலா மற்றும் இலங்கைத் தேயிலை சபையின் பாராட்டுக்களுடன் விருந்தினர்களை மகிழ்விக்க பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இலங்கை சுற்றுலா குறித்த ஆவணப்படமும் திரையிடப்பட்டது. துணைத் தூதுவரின் சுற்றுலா மற்றும் தேநீர் வழங்கல் பற்றிய விளக்கக்காட்சி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் எதிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்தனர்.

இலங்கை துணைத் தூதரகம்,

பிராங்பேர்ட் ஆம் மெயின்,

2021 செப்டம்பர் 09

 

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close