பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கைத் தேயிலை நன்கொடை

 பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கைத் தேயிலை நன்கொடை

பாகிஸ்தானில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை  அரசாங்கம் சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்கியது.

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பரூக் புர்கியிடம் 2022 செப்டெம்பர் 05ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள்  அமைச்சில் வைத்து தேயிலையை கையளித்த போது, வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இரங்கல் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கான இலங்கை அரசாங்கத்தினதும், இலங்கை மக்களினதும் ஆதரவையும் ஒற்றுமையையும் அவர் வெளிப்படுத்தினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 செப்டம்பர் 06

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close