நைஜீரியாவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள பணியாளர்களை இலங்கை உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார்

நைஜீரியாவினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள பணியாளர்களை இலங்கை உயர்ஸ்தானிகர் பார்வையிட்டார்

எம்/டி ஹீரோயிக் ஐடியூன் கப்பலுக்கான தூதரக விஜயத்தில் கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை  கனநாதன் இந்தியா, போலந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உயர்ஸ்தானிகர்கள் அல்லது இராஜதந்திரிகளுடன் 2022 நவம்பர் 27ஆந் திகதி இணைந்து கொண்டார்.

விஜயத்தைத் தொடர்ந்து, உயர்ஸ்தானிகர் இலங்கைக் குழு உறுப்பினர்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாக உறுதிப்படுத்தினார். போதிய பாதுகாப்பு மற்றும் உணவு, மருத்துவம், பொழுதுபோக்கு வசதிகள் உட்பட அனைத்து உதவிகளையும் நைஜீரிய கடற்படை  வழங்கி வருகின்றது.

ஆகஸ்ட் 2022 இல் நைஜீரிய கடல் சூழலுக்குள் நுழைந்ததற்காக நைஜீரிய அதிகாரிகளால் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அடுத்த  விசாரணை 2023 ஜனவரி 11ஆந் திகதி திட்டமிடப்பட்டுள்ளது.

அமைச்சும் உயர்ஸ்தானிகராலயமும் நிலைமையை தொடர்ந்தும் கண்காணிக்கும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 டிசம்பர் 02

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close