தெஹ்ரானில் நடைபெற்ற 18வது சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சியான 'தேயிலையின் உலகம்' இல் இலங்கை வெற்றிகரமாக பங்கேற்பு

தெஹ்ரானில் நடைபெற்ற 18வது சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சியான ‘தேயிலையின் உலகம்’ இல் இலங்கை வெற்றிகரமாக பங்கேற்பு

2022 அக்டோபர் 24-26 வரை தெஹ்ரானில் உள்ள பார்சியன் எஸ்டெக்லால் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற 18 வது சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சியான 'தேயிலையின் உலகம்' இல் இலங்கை தேயிலை சபையுடன் இணைந்து ஈரானில் உள்ள இலங்கைத் தூதரகம் பங்கேற்றது. முக்கியமாக இலங்கை, ஈரான், இந்தியா மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட தேயிலை ஏற்றுமதி மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் தமது தேயிலைப் பொருட்களை காட்சிப்படுத்தியதுடன், ஆயிரக்கணக்கான தேயிலைக் கொள்வனவாளர்கள் இந்த நிகழ்வில் ஈடுபட்டுள்ளனர். தெஹ்ரானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேயிலையின் உலகம் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி, ஈரான் மற்றும் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் இடம்பெறும் ஒரு மிகப் பெரிய தேயிலை வர்த்தகக் கண்காட்சியாகும். இது பொதுவாக வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் இறக்குமதியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஏனைய வணிகக் கூட்டாளர்களுடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான உற்பத்தித் தளமாக கருதப்படுகின்றது. இந்தக் கண்காட்சியில் சிலோன் டீ கூடம் பார்வையாளர்களிடையே பிரபலமான சாவடிகளில் ஒன்றாக அமைந்திருந்தது.

பாரம்பரிய எண்ணெய் விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடந்த்து,, இலங்கைத் தூதுவர் ஜி.எம்.வி.விஸ்வநாத் அபோன்சு, ஈரான் வர்த்தக சம்மேளனம், தொழில்கள், சுரங்கங்கள் மற்றும் விவசாயத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான துணைத் தலைவர் கலாநிதி அலிரேசா யாவாரி, சாம்லே டீயின்  நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. கவித் பாலகே, பங்கே டீயின் பணிப்பாளர் திருமதி. சாரா ஷரியாதி சரவி மற்றும் ஏனைய வணிகப் பிரதிநிதிகளால் இலங்கை தேயிலை சாவடி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. சிலோன் தேயிலை உண்மைகளின் வரம்பு காட்சிப்படுத்தப்பட்டதுடன், இலங்கைத் தேயிலை சந்தையை தக்கவைத்துக்கொள்வதற்கும் ஈரானில் சிலோன் தேயிலையை மேம்படுத்துவதற்கும் திட்டங்கள் மற்றும் புதிய வழிகள் பற்றிய கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தொடக்க விழாவின் போது, 18வது தேயிலை கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற அனைவரையும் ஈரான்  தேயிலை சங்கத்தின் தலைவர் ஹமித்ரேசா மொவாசாகி வரவேற்று, ஈரானின் இஸ்லாமிய குடியரசில் தேயிலை சந்தை மற்றும் தேயிலைத் தொழிலை மேம்படுத்த அனைவரும் இணைந்த கூட்டு ஈடுபாட்டின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், ஈரானின் தேயிலை சந்தையுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் அனைத்து தேயிலை ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தேயிலை சந்தையின் முன்னேற்றம், தடைகள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழி குறித்து கலந்துரையாடுவதற்கான வழக்கமான கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார். விவசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சாங்கிஸ் ஜஹாங்கிரியும் தனது கருத்துக்களை வெளியிட்டார்.

2022 தேயிலை நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுத்தமைக்காக  தேயிலை சங்கத்தின் தலைவர் மொவாஸ்ஸகிக்கு நன்றி தெரிவித்த இலங்கைத் தூதுவர் விஸ்வநாத் அபோன்சு, ஈரானிய இஸ்லாமியக் குடியரசிற்கு மிகவும் ஆரோக்கியமான, நல்வாழ்வு, தரம் மற்றும் சிறந்த தேயிலையை வழங்குவதே இலங்கையின் பிரதான நோக்கமாகும் என்று தெரிவித்தார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை எடுத்துரைத்த தூதுவர் அபோன்சு, ஈரானின் அனைத்து தேயிலை வர்த்தக பங்காளிகளையும் இலங்கையில் இருந்து அதிகளவு சிலோன் தேயிலையை இறக்குமதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

தூதுவர் விஸ்வநாத் அபோன்சு பல முக்கிய வர்த்தகர்களை சந்தித்து கண்காட்சியில் கலந்து  கொண்ட இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு பல வர்த்தக வாய்ப்புக்களை வழங்கினார். கென்யாவின் தூதுவர் ஜோசுவா ஐ. கதிமு, தலைவர் ஜோஹோ மிதாமோ வசாசுனா மற்றும் கென்யா தேயிலை சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், ஈரானில் தேயிலைத் தரம் மற்றும் தேயிலை மேம்பாடு உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக கூட்டாண்மையில் இணைந்து அனைத்து தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளையும் பாதுகாப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இலங்கைத் தேநீர் கடைக்கு வருகை தந்த கூட்டம், நுவரெலியா, உட புஸ்ஸல்லாவ, திம்புலா,  ஊவா, கண்டி, ருஹூண மற்றும் சப்ரகமுவ ஆகிய ஏழு சிலோன் தேநீர் சுவைகளின் திரவத் தேநீர் சேவையை இலங்கையின் வழக்கமான உணவு வகைகளுடன் ரசித்தது. இலங்கை தேயிலை சாவடிக்கு வருகை தந்த அனைத்து பார்வையாளர்களுக்கும் சிலோன் டீ பொதி பரிசாக வழங்கப்பட்டது.

இலங்கைத் தூதரகம்,

தெஹ்ரான்

2022 அக்டோபர் 28

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close