சூரிநாம் தூதுவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கைக்கு கையளிப்பு

 சூரிநாம் தூதுவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கைக்கு கையளிப்பு

புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான சூரிநாம் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. அருண்கோமர் ஹார்டியன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன்  சூரிநாம் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கண்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து 2023 நவம்பர் 05ஆந் திகதி காலை 10.30 மணிக்கு சமர்ப்பித்தார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2023 நவம்பர் 05

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close