சிறந்த 50 தொழில்முறை மற்றும் தொழில்சார் பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் அரச மற்றும் அரசாங்கத் துறை விருதை தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் பெற்றார்

சிறந்த 50 தொழில்முறை மற்றும் தொழில்சார் பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் அரச மற்றும் அரசாங்கத் துறை விருதை தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் பெற்றார்

2022 ஜனவரி 18ஆந் திகதி கொழும்பில் உள்ள ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவின் சிறந்த 50 தொழில்முறை மற்றும் தொழில்சார் பெண்களுக்கான விருது வழங்கும் விழாவின் 11வது பதிப்பில் தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் 2021ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசாங்கத் துறை விருதை வென்றார்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில் திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சர் கலாநிதி சீதா அரம்பேபொலவினால் இவ்விருது வழங்கி வைக்கப்பட்டது.

விருது வழங்கும் விழாவின் போது, இலங்கை மற்றும் மாலைதீவைச் சேர்ந்த 50 சிறந்த தொழில்முறை மற்றும் தொழில்சார் பெண்கள் அந்தந்தத் துறைகளிலான தமது தொழில்முறை மற்றும் தொழில்சார் சாதனைகளுக்காக விருதுகளைப் பெற்றனர்.

இலங்கை இராஜதந்திரியாகவும் சர்வதேச அரச உத்தியோகத்தராகவும் 33 வருட கால சேவையை மேற்கொண்டு குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்தமைக்காக வெளிநாட்டு அமைச்சின் தூதுவர் ஆசிர்வாதம் அவர்களுக்கு கௌரவமான அரச மற்றும் அரசாங்கத் துறை விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2022 ஜனவரி 20

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close