ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இலங்கையின் அனுசரணையுடன் மார்ச் 1ஆந் திகதியை 'உலக கடற்பரப்பு தினமாக' பிரகடனப்படுத்த தீர்மானம் நிறைவேற்றம்

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இலங்கையின் அனுசரணையுடன் மார்ச் 1ஆந் திகதியை ‘உலக கடற்பரப்பு தினமாக’ பிரகடனப்படுத்த தீர்மானம் நிறைவேற்றம்

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது இலங்கையின் அனுசரணையுடன் கூடிய A/76/L.56 தீர்மானத்தை ஏற்று மார்ச் 01ஆந் திகதியை உலக கடற்பரப்பு தினமாக 2022 மே 23 அன்று பிரகடனப்படுத்தியது. இந்தத் தீர்மானம் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், 24 நாடுகளின் இணை அனுசரணையுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ், நிகழ்ச்சி நிரல் 15: பொருளாதார, சமூக மற்றும் தொடர்புடைய துறைகளில் முக்கிய ஐக்கிய நாடுகளின் மாநாடுகள் மற்றும் உச்சிமாநாடுகளின் முடிவுகளை இணைந்த மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் செயற்படுத்தல் மற்றும் பின்தொடர்தல் இன் கீழ் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்.

தூதுவர் பீரிஸ் தனது முன்னுரையில், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க அம்சத்தின் மீது கவனத்தையும் விழிப்புணர்வையும் கொண்டு வருவதில் கடல்சார் மாநிலமாக இலங்கையின் ஆர்வத்தை எடுத்துரைத்தார். கடலோர அரிப்புக்கு எதிரான பாதுகாப்பிலும், கடலின் அடிப்பகுதியை நிலைப்படுத்துவதிலும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய சுற்றுச்சூழல் அமைப்புக்களின் பின்னடைவை அதிகரிப்பதிலும், பல கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவு நிலைத்தன்மையை அதிகரிப்பதிலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கடற்பரப்பின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

உலக கடற்பரப்பு சங்கம் இந்த முயற்சியில் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கமான ஆதரவை வழங்கியது.

159 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் சுமார் 300,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட கடற்பாசிகள் பூமியில் உள்ள மிகவும் மதிப்புமிக்க கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும். அவை முக்கியமான சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை வழங்குகின்றன. கடற்பாசியின் மகத்தான கார்பன் வரிசைப்படுத்தல் திறன், உலகின் கடல்சார் கார்பனில் 18 சதவீதம் வரை சேமித்து வைப்பது மிகவும் குறிப்பிடத்தக்க நன்மையாக அமைவதுடன், இது மழைக்காடுகளை விட அதிகமாகும் அதே வேளை, காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளை மாற்றியமைத்து, குறைக்கும் முயற்சிகளில் கடற்பாசியைப் பாதுகாப்பதற்கும் மறுசீரமைப்பதற்கும் ஒரு முக்கிய கருவியாக அமைகின்றது. கடற்பாசிகளின் முக்கிய செயங்பாடுகள் கடலின் அடிப்பகுதியை நிலைநிறுத்துவதில் அதன் பங்கை உள்ளடக்கியுள்ளதுடன், பல கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்தை வழங்குவதன் மூலம் சுற்றுச்சூழல் ஆதரவை வழங்குகின்றது. இதில் வணிக மற்றும் பொழுதுபோக்கு மீன் இனங்கள் மற்றும் ஆமைகள், டுகோங்ஸ் மற்றும் மொனடீஸ் போன்ற அழிந்து வரும் மற்றும் கவர்ச்சியான இனங்கள் அடங்கும். இருப்பினும், மனித நடவடிக்கைகளின் விளைவாக கடற்பாசி சுற்றுச்சூழல் அமைப்புக்கள் அழிக்கப்படுகின்றன. 'அவுட் ஒஃப் த ப்ளூ: சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் கடற்பாசியின் மதிப்பு' என்ற ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட வெளியீடு உலகளவில் கடற்பாசியின் 7 சதவிகிதம் கடல் வாழ்விடத்தை இழந்து வருவதுடன், இது ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு கால்பந்து மைதானத்திற்கு சமமான கடல் புல்வெளியை இழப்பதாக குறிப்பிடுகின்றது.

இந்த முன்முயற்சியானது கடற்பாசி சுற்றுச்சூழல் அமைப்புக்கள் குறித்து கற்றல் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் கல்வியியலாளர்களால் இயற்கை அடிப்படையிலான தீர்வுகளின் மூலம் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பை ஆராய்தல் மற்றும் கொள்கை அளவில் விஞ்ஞான சான்று அடிப்படையிலான அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தல் ஆகியவற்றுக்கு வழி வகுத்தது.

சுற்றாடல் அமைச்சின் பல்லுயிர் பெருக்க செயலகம், வயம்ப பல்கலைக்கழகத்தில் உள்ள மீன்வளர்ப்பு மற்றும் மீன்வளத் திணைக்களம் மற்றும் நீல வள அறக்கட்டளை ஆகியவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சமுத்திர விவகாரம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவுடன் இணைந்து செயல்பட்டதுடன், இது தொடர்பாக நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. விற்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகத்துடன் இந்த செயன்முறைக்கு பங்களிப்பதற்காக ஒருங்கிணைக்கப்பட்டது.

தூதுவர் பீரிஸின் அறிமுக உரையை இங்கே காணலாம்: https://youtu.be/S3EB7C0I0kY

தீர்மானத்தின் முழுமையான ஏற்புரையை இங்கே காணலாம்: https://youtu.be/gnJ2huRVs3k

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம்,

நியூயோர்க்

2022 மே 25

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close