எத்தியோப்பியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தல் சுதந்திரத்தின் 74வது ஆண்டு விழாக் கொண்டாட்டம்

எத்தியோப்பியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தல் சுதந்திரத்தின் 74வது ஆண்டு விழாக் கொண்டாட்டம்

எத்தியோப்பியாவில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கையின் சுதந்திரத்தின் 74வது ஆண்டு விழாவை தூதரக வளாகத்தில் 2022 பிப்ரவரி 04ஆந் திகதி தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் கொண்டாடியது.

இணைப்பாளர் சாமர தர்மவர்தன தேசியக் கொடியை ஏற்றிவைத்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கையின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் நிகழ்வு ஆரம்பமானது. இலங்கையின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாரம்பரிய மங்கள விளக்கு தூதரக ஊழியர்களால் ஏற்றப்பட்டது. அதன் பின்னர், இலங்கையின் பிரதமர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்திகள் தூதரக அதிகாரிகளால் விருந்தினர்களுக்கு வாசிக்கப்பட்டது.

இலங்கையின் பால் சோறு, பாரம்பரிய இனிப்பு வகைகள் மற்றும் சிலோன் தேநீர் ஆகியவற்றை வழங்கி வைத்ததுடன் நிகழ்வு நிறைவுற்றது.

இலங்கைத் தூதரகம்,

அடிஸ் அபாபா

2022 பிப்ரவரி 14

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close