எக்குவடோரியல் கினியாவினால் கைது செய்யப்பட்ட எம் டி ஹீரோயிக் இடன் என்ற எண்ணெய்க் கப்பலின் இலங்கைப்  பணியாளர்கள் குறித்த ஊடக அறிக்கை

எக்குவடோரியல் கினியாவினால் கைது செய்யப்பட்ட எம் டி ஹீரோயிக் இடன் என்ற எண்ணெய்க் கப்பலின் இலங்கைப்  பணியாளர்கள் குறித்த ஊடக அறிக்கை

எம் டி ஹீரோயிக் இடன் என்ற எண்ணெய்க் கப்பலின் பணியாளர்களான 8 இலங்கைப் பிரஜைகள் விரைவில் விடுவிக்கப்பதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றது. 2022 ஆகஸ்ட் 10ஆந் திகதி எக்குவடோரியல் கினியா அதிகாரிகளால் குறித்த எண்ணெய்க் கப்பல் தடுத்து வைக்கப்பட்டது. நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இலங்கைப் பிரஜைகளுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 நவம்பர் 11

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close