ஊடக அறிக்கை

ஊடக அறிக்கை

01 ஏப்ரல் 2021 அன்று கொழும்பில் மெய்நிகராக இடம்பெறவுள்ள 17 ஆவது பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முயற்சியின் (BIMSTEC),  அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு மியன்மார் வெளிநாட்டமைச்சருக்கு அழைப்பு விடப்பட்டிருப்பது தொடர்பாக சமூக ஊடக தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார கூட்டுறவிற்கான வங்காள விரிகுடா முயற்சிக்கு (BIMSTEC) தலைமை தாங்கும் இலங்கை; இந்த வருட இறுதியில் இலங்கையில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்பட்டுள்ள 5 ஆவது BIMSTEC உச்சிமாநாட்டின் ஆவணங்களை இறுதிப்படுத்தும் நோக்குடன், அதுசம்பந்தமான கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்கு அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் (பங்களாதேசம், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம் மற்றும் தாய்லாந்து) அழைப்பு விடுத்துள்ளது.

 

வெளிநாட்டமைச்சு
கொழும்பு

10 மார்ச் 2021

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close