உலக உணவு இஸ்தான்புல் வர்த்தகக் கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு

 உலக உணவு இஸ்தான்புல் வர்த்தகக் கண்காட்சியில் இலங்கை பங்கேற்பு

 

தூய சிலோன் தேநீரை சுவைப்பதற்காக 2022 செப்டம்பர் 1 முதல் 4 வரை இஸ்தான்புல்,  துருக்கியில் நடைபெற்ற உலக உணவு இஸ்தான்புல் வர்த்தகக் கண்காட்சியில் இலங்கைக் கூடத்தில் ஏராளமான பார்வையாளர்கள் ஒன்று திரண்டனர்.

சிலோன் டீ லேண்ட் (பிரைவேட்), லிமிடெட் ரன்ஃபர் குரூப், டம்ரோ எக்ஸ்போர்ட்ஸ் (பிரைவேட்)  லிமிடெட், ஹெரிடேஜ் டீஸ் (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சிலோன் டீ மார்க்கெட்டிங் (பிரைவேட்) லிமிடெட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தின.

பங்குபற்றிய நிறுவனங்கள் தமது உற்பத்திகளை பிரபல துருக்கிய நிறுவனங்களுடன்  இலங்கைக் கூடத்தில் காட்சிப்படுத்தினர். இலங்கைக் கூடத்தில் கண்காட்சி முழுவதும் பார்வையாளர்கள் தேநீர் சுவைப்பதற்கான ஏற்பாடு தூதரகத்தால் செய்யப்பட்டிருந்தது.

யூரேசியாவில் நடைபெறும் மிகப்பெரிய உணவுப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பக்  கண்காட்சியான உலக உணவு இஸ்தான்புல் வர்த்தகக் கண்காட்சியில், 40 நாடுகளில் இருந்து உற்பத்தியாளர்கள், கொள்வனவாளர்கள் மற்றும் வழங்குநர்கள் கலந்து கொள்கின்றனர். இது துருக்கிய வர்த்தக அமைச்சு, கோஸ்கெப், ஐ.எச்.பி.ஐ.ஆர், துருக்கிய சமையல்காரர்கள் சங்கம், கெஸ்ட்ரோனமி சுற்றுலா சங்கம் மற்றும் உலக சிறந்த சுவை தெரிவோர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடாத்தப்படுகின்றது.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2022 செப்டம்பர் 07

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close