இலங்கையில் வதிகின்ற துணைத் தூதுவர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் சந்திப்பு

இலங்கையில் வதிகின்ற துணைத் தூதுவர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் சந்திப்பு

கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவிகளை வழங்குமாறு இலங்கையில் வதிகின்ற துணைத் தூதுவர்களிடம் வெளிநாட்டு அமைச்சர் கேட்டுக்கொண்டார். பிலிப்பைன்ஸ், அவுஸ்திரேலியா, பல்கேரியா, சீஷெல்ஸ், ஈக்வடோர் மற்றும் போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த கௌரவ தூதுவர்கள் வெளிநாட்டு அமைச்சரை ஜூலை 2ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தபோது அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அணிசேரா வெளியுறவுக் கொள்கையுடன் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுடன் நட்புறவில் ஒத்துழைத்து வருவதனால், ஏனைய நாடுகளின் உதவியை அது எளிதாக்குவதாகத் தெரிவித்த அமைச்சர், இலங்கையின் பொருளாதார மற்றும் வணிக விவகாரங்களுக்காக உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்குமாறும் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close