இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிங்கப்பூரின் சமூகக் கொள்கைகளுக்கான சிரேஷ்ட மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சருடன் சந்திப்பு

 இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சிங்கப்பூரின் சமூகக் கொள்கைகளுக்கான சிரேஷ்ட மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சருடன் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சிங்கப்பூரின் சமூகக் கொள்கைகளுக்கான சிரேஷ்ட மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்தார். இந்த சந்திப்பு 2022 ஜூன் 09ஆந் திகதி சிங்கப்பூர் நிதி அமைச்சில் நடைபெற்றது.

சிரேஷ்ட மற்றும் சமூக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரான சண்முகரத்னம் அவர்கள், சிங்கப்பூர் மத்திய வங்கி நாணய அதிகார சபையின் நிருவாக பணிப்பாளராகவும் நிதி நெறிப்படுத்துனராகவும் உள்ளார். இவர் சிங்கப்பூரின் நிதி அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளா

இலங்கையின் பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல்கள் தொடர்பாக அமைச்சர் சண்முகரத்தினத்திற்கு விளக்கமளித்த அமைச்சர் பீரிஸ் இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முன்னோக்கிச் செல்லும் வழிகள் குறித்து சிங்கப்பூரின் உதவியைக் கோரினார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இரு அமைச்சர்களும் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 ஜூன் 10

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close