இலங்கைக்கான பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவரின் நியமனம்

இலங்கைக்கான பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவரின் நியமனம்

மேன்மைதங்கிய (திருமதி.) எலிசபெத் - சோஃபி மஸ்ஸெல்லா டி பொஸ்கோ பல்சா அவர்களைத் தொடர்ந்து இலங்கைக்கான பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. செர்ஜியோ லூயிஸ் கானேஸ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் பிரேசில் கூட்டமைப்புக் குடியரசின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களிடம் 2020 மே 14 ஆந் திகதி காலை 11.00 மணிக்கு சமர்ப்பித்தார்.

இலங்கையில் முதல் முறையாக வீடியோ மாநாட்டினூடாக இந்தத் தகுதிச் சான்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
குடியரசுக் கட்டிடம்
கொழும்பு 01.

14 மே 2020

Video Link: https://m.youtube.com/watch?v=FkcSwsodY9g

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close